tamilnadu

கல்விச் சுற்றுலா செல்ல  மாணவர்களுக்கு நிதி

புதுச்சேரி, பிப்.18- ஆதிதிராவிட சட்ட மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலாநிதி ரூ.4.88 லட்சத்தை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வழங்கினார். புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்க ளுக்கு பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக உச்சநீதிமன்றம், பாராளுமன்றம் மற்றும் இதர வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு கல்விச்சுற்றுலா சென்று வர அனுமதிக் கப்பட்டு வருகிறது. அதன்படி கல்விச்சுற்றுலா செல்லும் சட்டக்கல்லூரி ஆதிதிராவிட மாணவர்களுக்கு பயணக் கட்டணம், உணவு,  தங்குமிடம் மற்றும் இதர செலவுகளுக்காக ஆண்டுதோறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நிதியுதவி வழங்கப்பட்டுவருகிறது.  இதன் அடிப்படையில்  நடப்பு நிதியாண்டில் மாணவர் ஒருவருக்கு ரூ. 23 ஆயிரத்து 250 வீதம், 21 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.4 லட்சத்து 88 ஆயிரத்து 250 ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களுக்கு நிதி வழங்கும் விழா சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி சட்டக் கல்லூரி முதல்வரிடம் நிதியை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துறைச் செயலர் ஆலிஸ்வாஸ், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ரகுநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.