இந்திய விவசாயியின் வாழ்க்கை போராட்டத்தை குறித்து எடுக்கப்பட்டுள்ள ’மோதி பாக்’ என்ற ஆவணப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் பாரி கர்வால் பிராந்தியத்தில் வசிக்கும் 83 வயதுடைய விவசாயி வித்யாதுத்தின் வாழ்க்கை போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படம் 'மோடி பக்'. இந்த ஆவணப்படத்தை நிர்மல் சந்தர் இயக்கியுள்ளார். இந்த படத்தில், வேலை தேடி கிராமங்களை விட்டு வெளியேறும் மக்களால், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசாகி வருகிறதையும், விவசாயிகளின் போராட்டங்கள் குறித்தும் சுட்டி காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆவணப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.