மோடி 2.0 அரசு அமைந்தவுடன் நூறுநாள் திட்டம் என அறிவித்து இந்திய நாட்டின் வளங்களை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்க ளை தனியாருக்கு தாரைவார்க்க திட்டமிட்டு அதை நாடாளு மன்றத்தில் தனது மிருகபலப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றி வருகிறது. ஏறத்தாழ 28 மசோதாக்கள் அவசரகதியில் தாக்கல் செய்யப்பட்டு பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு நாட்டின் இறையாண்மை மற்றும் சுயசார்புக்கு வேட்டு வைத்துள்ளது. நாட்டின் நிதிஅமைச்சர் இந்திய பொருளாதார கொள்கை அறிக்கையில் இனி இந்திய அரசு நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக நிதி முதலீடு செய்யாது என்றுதிட்டவட்டமாகஅறிவித்துள்ளார். 2019-20 நிதிநிலை அறிக்கையில் ராணுவ செலவு களுக்கு ரூ. 4,31,011 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 15.5% மத்திய அரசின் செலவீனங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளதென்றும் பெரும் பகுதி தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் மற்றும் சமூக செலவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதென்றும் அரசு தெரி விக்கிறது. பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்த 18% ஒதுக்கி யுள்ளது. இது 2011-12 ஆண்டின் ஒதுக்கீட்டை விட 8% குறைவாகும். இன்றைய தேவைக்கேற்ப நவீனமயத்திற்கு அதிகநிதி தேவைப்படுகின்றது என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. அதை எந்த ஒரு இந்தியனும் மறுக்க மாட்டான். ஆனால் நவீனம், தாராளமயம் என்ற பெயரில் நாட்டின் பாதுகாப்பை கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைப்பதை தான் தேசபக்தி உள்ள இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள். மோடி அரசின் இந்த செயலை கண்டித்து தான் நாடு முழுவதும் முப்பது நாட்கள் வேலைநிறுத்தம்.
நாட்டில் இந்த அமைச்சகத்திற்கு ஏறத்தாழ 17 லட்சம் 30 ஆயிரம் ஏக்கர் உபரிநிலம் உள்ளது. அவற்றை தனியார் மற்றும் பொதுத்துறை பங்கேற்பு மூலமாக முழுமையாக பயன்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் அர்த்தம் என்னவெனில் ஏற்கனவே அரசு நிலவங்கி என்று துவக்கப்பட வேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த உபரிநிலங்க ளை ஒன்று சேர்த்து அவற்றை தனியாருக்கு குறிப்பாக கார்ப்பரேட்டுகளுக்கும் இந்திய ஏக போக முதலாளி களுக்கும் தாரைவார்ப்பது தான் நோக்கம் .மத்திய இந்திய தொழிற்சங்கங்கள் மற்றும் பாதுகாப்புத்துறை தொழிற் சங்கங்கள் அனைத்தும் இந்த உபரிநிலங்களை முறை யாக பாதுகாப்பு உற்பத்தி வளாகங்களாக உருவாக்கி அங்கு இந்திய பாதுகாப்புதுறைக்கு தேவையான உபரிபாகங்களை உற்பத்தி செய்யும் சிறு குறு தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். ஆனால் அரசின் நிலைபாடோ இதற்கு எதிர்மாறாக உள்ளது.
ஊழியர்கள் உரிமைகள் சலுகைகள் பறிப்பு
மனிதவளம் அதாவது ஊழியர்களை, தொழிலாளர்க ளை பகுத்தறிந்து குறைப்பதன் மூலம் நிதி நிலையை சீர் படுத்துவது, ஏற்கனவே ஊழியர்கள் பெற்று வந்த ஓய்வூதியத்தை நிராகரித்து புதிய தேசிய ஓய்வூதியத் திட்டத்துடன் இணைப்பது என்று தனது கொள்கையில் அறிவித்து உள்ளது பாதுகாப்பு அமைச்சகம். அவ்வாறு இணைக்கும் போது ஊழியர்கள் பெற்று வந்த சிறப்புச் சலுகைகள் மற்றும் பணப்பலன்களை பெருமளவில் இழக்க நேரிடும். ஒரு தகுதி ஒரு ஓய்வூதியம் என்பதும் நிராகரிக் கப்படும். முப்படைகளின் அனைத்து பாதுகாப்பு உற்பத்தி தொழிற் சாலைகள், அடிப்படை பராமரிப்பு நிறுவனங்கள் ,ராணுவ பணிமனைகள், கடற்படை தளங்கள் என அனைத்தும் தனியார்-பொது பங்கேற்பு என்ற அடிப்படையில் இனி செயல்படுத்தப்படும். அவ்வாறு செயல்படும் போது நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு ரகசியங்கள் களவாடப்படும் நிலை ஏற்படும். தற்போதுள்ள பாதுகாப்பு தளவாட மற்றும் சாதனங்கள் கொள்முதல் முறை பழைய முறை என்றும் அது அமைச்ச கத்திற்கு ஒப்புதல் பெற பல படிநிலைகளில் ஏறத்தாழ எட்டு கமிட்டிகளின் ஒப்புதல், 80 அதிகாரிகளின் கையெழுத்து கள் பெறப்பட்ட பின்னர் தான் அது ஆணையாக மாறும். இதற்கு பல மாதங்களாகிறது. அதுமட்டுமல்ல நாட்டின் தலைமை பொது தணிக்கை ஜெனரல், கொள்முதல் நடை முறையில் பல்வேறு பிரச்சனைகளான கால அவகாசத்தை குறைக்க வேண்டும்; சிக்கலான நடைமுறைகளை தவிர்க்க வேண்டும் என்று பல தாவாக்களில் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்ல, ஏலத்தில் கலந்து கொள்பவர்களின் தகுதி பாதுகாப்புத்துறை குறிப்பிட்டுள்ள நடைமுறை வரம்புகளுக்குள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மனிதவளம் அதாவது ஊழியர்களை, தொழிலாளர்க ளை பகுத்தறிந்து குறைப்பதன் மூலம் நிதி நிலையை சீர் படுத்துவது, ஏற்கனவே ஊழியர்கள் பெற்று வந்த ஓய்வூதியத்தை நிராகரித்து புதிய தேசிய ஓய்வூதியத் திட்டத்துடன் இணைப்பது என்று தனது கொள்கையில் அறிவித்து உள்ளது பாதுகாப்பு அமைச்சகம். அவ்வாறு இணைக்கும் போது ஊழியர்கள் பெற்று வந்த சிறப்புச் சலுகைகள் மற்றும் பணப்பலன்களை பெருமளவில் இழக்க நேரிடும். ஒரு தகுதி ஒரு ஓய்வூதியம் என்பதும் நிராகரிக் கப்படும். முப்படைகளின் அனைத்து பாதுகாப்பு உற்பத்தி தொழிற் சாலைகள், அடிப்படை பராமரிப்பு நிறுவனங்கள் ,ராணுவ பணிமனைகள், கடற்படை தளங்கள் என அனைத்தும் தனியார்-பொது பங்கேற்பு என்ற அடிப்படையில் இனி செயல்படுத்தப்படும். அவ்வாறு செயல்படும் போது நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு ரகசியங்கள் களவாடப்படும் நிலை ஏற்படும். தற்போதுள்ள பாதுகாப்பு தளவாட மற்றும் சாதனங்கள் கொள்முதல் முறை பழைய முறை என்றும் அது அமைச்ச கத்திற்கு ஒப்புதல் பெற பல படிநிலைகளில் ஏறத்தாழ எட்டு கமிட்டிகளின் ஒப்புதல், 80 அதிகாரிகளின் கையெழுத்து கள் பெறப்பட்ட பின்னர் தான் அது ஆணையாக மாறும். இதற்கு பல மாதங்களாகிறது. அதுமட்டுமல்ல நாட்டின் தலைமை பொது தணிக்கை ஜெனரல், கொள்முதல் நடை முறையில் பல்வேறு பிரச்சனைகளான கால அவகாசத்தை குறைக்க வேண்டும்; சிக்கலான நடைமுறைகளை தவிர்க்க வேண்டும் என்று பல தாவாக்களில் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்ல, ஏலத்தில் கலந்து கொள்பவர்களின் தகுதி பாதுகாப்புத்துறை குறிப்பிட்டுள்ள நடைமுறை வரம்புகளுக்குள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்பு உற்பத்தி யில் தனியாரை மற்றும் அந்நிய நாட்டு முதலாளிகளை ஈடுபடுத்த இந்திய அரசு ஏற்கனவே ஏராளமான முயற்சி களை எடுத்து வருகிறது. அதாவது ஏற்கனவே இருந்த 26% அந்நிய முதலீடு என்று இருந்ததை 100% என அதிக ரித்துள்ளது. இந்திய தனியார் நிறுவனங்களும் உற்பத்தியில் ஈடுபட, முதலீடு செய்ய மற்றும் உற்பத்தி ஆணை கள் பெற ஏற்கனவே இருந்த பல்வேறு விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. 2025 ஆண்டிற்குள் ரூ. 1,70,000 கோடி அளவிற்கான தளவாட உற்பத்தி மற்றும் ரூ.35,000 கோடி ஏற்றுமதிக்கான இலக்கை பாதுகாப்புத்துறை நிர்ண யித்து அவற்றை முழுமையாக தனியாருக்கு வழங்குவது என்று ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே இந்திய பொ துத்துறை நிறுவனங்களுக்கு வரவேண்டிய வேலை ஆணைகள் அனுபவமில்லாத தனியார் நிறுவனங்களுக்கு ரூ.6000 கோடி அளவிற்கு உற்பத்தி ஆணைகள் வழங்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அரசு கூட தனது பாதுகாப்புத்துறை சம்பந் தப்பட்ட நடவடிக்கைகளில் அந்நியநாட்டை அனுமதிப்பது இல்லை. அதற்கான சட்டப் பாதுகாப்பை அதன் நாடாளு மன்றம் நிறைவேற்றி உள்ளது. ஆனால் நமது இந்திய அரசு உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் இந்திய பாது காப்புத் துறையை ஒரு சந்தையாக மாற்றி அந்நிய நாட்டிற்கும் இந்திய பெரும் முதலாளிகளுக்கும் திறந்து விட்டுள்ளது தேசபாதுகாப்பை காவு கொடுப்பதற்கு ஈடாகும். தேசப்பற்றை, தேசியவாதத்தை நொடிக்கு ஒரு முறை பேசும் மோடி தலைமையிலான அரசு அதைச் செய்து வருகிறது.
பாதுகாப்புத் தொழிற்சாலைகள் கார்ப்பரேட்மயம்
ஆர்டினன்ஸ் தொழிற்சாலைகளின் செயல் திறனை மேம்படுத்துவது பொறுப்பாக்குவது மற்றும் கூட்டுமயமாக்கல் என்ற பெயரில் மத்திய பொதுத்துறை களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்க முடிவெடுத்துள் ளது மோடி அரசு. அதில் பல இந்திய நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களுடன் கை கோர்த்து உள்ளன. இந்திய பாதுகாப்புத்துறை தளவாடங்கள் உற்பத்தியில் மிக முக்கியமான பங்கை அளிக்கும் பிஇஎம்எல், கோவா சிப்யார்டு லிட், மாசாகோன் டாக் சிப் பில்டர்ஸ் லிட், இந்துஸ் தான் சிப் யார்ட் லிட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், உற்பத்தி செய்து வந்த அனைத்தும் இனி தனியார் நிறுவ னங்கள் பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து உற்பத்தி செய்யும்.
நமது விஞ்ஞானிகளின், தொழிலாளர்களின், ஊழியர்க ளின் உழைப்பால் உருவாக்கப்பட்டவை பொதுத்துறை நிறு வனங்கள். ‘பாதுகாப்பு துறையில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் மிக நேர்த்தியாக தங்களுக்கு அளிக்கப் பட்ட வேலை ஆணைகளை நிறைவேற்றுகிறார்கள்’ என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். தனது அமைச்சரே பாராட்டிய நிறுவனங்களை மோடி 2.0 அரசு தனியாருக்கு தாரைவார்க்க முடிவெடுத்து அதற்கான பணிகளை மும்முரமாக செய்து வருகிறது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையில் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிட் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிட் ஆகிய இரண்டு பொதுத்துறை நிறுவனங்களும் தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வருகின்றன. அவற்றையும் இந்த அரசு கார்ப்பரேட்மயத்திற்கு தள்ளுகிறது. 2017 ஏப்ரல் மாதத்தில் பாதுகாப்பு அமைச்சகம் நாட்டின் 41 ஆர்டினன்ஸ் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்து வந்த 143 தளவாடங்களை அவுட்சோர்சிங் மூலமாக தனியாருக்கு வழங்கியுள்ளது. 222 உரிமங்களை தனியார் நிறுவனங்க ளுக்கு வழங்கியுள்ளது மோடி அரசு. இதனால் அங்கு பணி புரியும் 20000 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படும் அபாயத்தால் தொழிலாளர்களுக்கு மன உளைச்சல் ஏற் பட்டுள்ளது. அது மட்டுமல்ல ஆர்எப்ஐ, ஒஎப்டி, எஸ்ஏஎப் ஆகிய நிறுவனங்களை தனியாருக்கு வழங்க நிதி ஆயோக் ஆலோசனை கூறி உள்ளது. எளிமையான வர்த்தகம் என்ற பெயரில் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியை தனியாருக்கு வழங்குவது பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டு என தனியாரை அனுமதித்து வருகிறது மோடி 2.0 அரசு. கோவா சிப் யார்ட் நிறுவனத்தில் 25% பங்குகள் விற்பனை, மற்ற சிப் யார்டுகள் தென் கொரிய ஹூண்டாய் கனரக தொழில் நிறுவனத்துடன் ஒப்பந்தம்.
அதோடு ரிலையன்ஸ் டிபென்ஸ் லிட், லார்சன் டுப்ரோ போன்ற நிறுவனங்களை அரசு முன்னிலைப்படுத்தி வரு கிறது. குஜராத்தில் உள்ள பிப்பாவ் சிப் யார்டுடன் ரிலை யன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் 198 போர்க்கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களின் கட்டு மான பணிகள் தனியாருக்கு வழங்கப்பட உள்ளன. இதன் மதிப்பு ஏறத்தாழ மூன்று லட்சம் கோடியாகும். கடந்த எழுபது ஆண்டுகளாக அபிவிருத்தி செய்யப்பட்ட நமது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி திறனை அழிப்பதற்கான இந்த சதியை எதிர்த்து 41 தொழிற்சாலைகளில் பணி புரியும் 85 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் 20.08.19 முதல் முப்பது நாட்கள் தேசத்தை பாதுகாக்க உண்மையான தேசப்பற்றுடன் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். நாட்டை காப்பாற்ற இந்திய மக்களை காப்பாற்ற இந்த தேசப்பற்று மிக்க வேலைநிறுத்தத்தை இந்திய தொழிற்சங்க மையத்தின் அனைத்து இணைக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் ஆத ரிக்கின்றன. நாட்டின் மீது அக்கறை கொண்டுள்ள அனைத்து பகுதி மக்களும் இதை ஆதரிக்கின்றனர்.