பிரபல நகைச்சுவை நாடக நடிகரும் புகழ்பெற்ற வசன கர்த்தாவுமான கிரேஸி மோகன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
கிரேஸி மோகன் அக்டோபர் 16, 1952 ல் பிறந்தார். தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றி வருபவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றுபவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். 1983ல் ல் திரையுலகிற்கு வந்தார். பொய்க்கால் குதிரையாட்டம் படத்தில் முதல் முதலாக வசன கர்த்தாவாக பணியாற்றினார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார். அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, மைக்கேல் மதன காமராஜன் , அருணாச்சலம், இந்தியன், வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்
இந்நிலையில் இவர் மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மரணத்திற்கு தமிழ் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.