tamilnadu

பெகுசராயில் சிபிஐ ஊழியர் படுகொலை

புதுதில்லி, மே 21-பீகார் மாநிலத்தில், பெகுசராய் தொகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கன்னையா குமார் போட்டியிடுகிறார். இவருக்காகக் கடுமையான முறையில் தேர்தல் வேலைகளை மேற்கொண்ட கட்சி ஊழியர், ஃபாகோ டண்டி என்பவர் பாஜக குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பாக இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசிய செயலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:பெகுசராய் தொகுதியில், வேட்பாளர் கன்னையா குமாருகாக வேலை செய்த கட்சி ஊழியர் ஃபாகோ டண்டியை பாஜக குண்டர்கள்கிரிமினல்களுடன் சேர்ந்துகொண்டு இழுத்துச் சென்று தாக்கி, கொன்றுள்ளார்கள். ஃபாகோ டண்டி கிரிமினல் களால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தை உடனடியாகக் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தும், காவல்துறையினர் அவரைக் காப்பாற்றிட எவ்வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை.நிதிஷ் குமார் அரசாங்கம், ஃபாகோ டண்டியைக் கொன்ற கிரிமினல்களை உடனடியாகக் கைது செய்திட வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. (ந.நி.)