சென்னை:
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.மேலும் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். தென்கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அந்த மையம் கேட்டுக் கொண்டுள்ளது.