சென்னை
இலங்கைக்குத் தென்கிழக்கே தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் சில இடங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், உள் மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்குக் கடலுக்குச் செல்ல எச்சரிக்கை ஏதும் இல்லை. வழக்கம் போலக் கடலுக்குச் செல்லலாம் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.