tamilnadu

img

மீனவர் வீடுகட்டும் நிதியை அதிகரித்திட வேண்டும்

புதுதில்லி, ஜூலை 18- மீனவர் நலனுக்கான தேசியத் திட்டத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள வை உறுப்பினர் வழக்குரைஞர் ஏ.எம். ஆரிப் கோரினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரு கிறது. செவ்வாய்க்கிழமையன்று மக்களவை யில் கேள்வி நேரத்தின்போது, மீனவர் நலனுக்கான தேசியத் திட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதில் பங்கேற்று ஏ.எம். ஆரிப் பேசியதாவது: மீனவர் நலனுக்கான தேசியத் திட்டத்திற்கு மத்திய அரசு அவர்கள் வீடு கட்டுவதற்கான தொகையில் 60 ஆயிரம்ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருக்கிறது.

ஒரு வீடு கட்டுவதற்கானமொத்த செலவினம் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். இதில் நீங்கள்வெறும் 60 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுக்கிறீர்கள். அதே சமயத்தில் கேரள மாநில அரசு, ஒரு வீடு கட்டுவதற்காகும் மொத்தச் செலவினம் 4 லட்ச ரூபாயில், 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்அளிக்கிறது.   கேரளாவில் 5,600 குடும் பத்தினர் பயனாளிகளாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். 4 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளுக்கு அளிக்கப் பட்டிருக்கின்றன. என்.கே.  பிரேமச்சந்திரன் குறிப்பிட்டதைப் போல, 12 ஆயிரத்து 600 மீன வர்கள் வீடற்றவர்கள் மற்றும் நிலமற்றவர்கள் என்றும்அடை யாளம் காணப்பட்டிருக்கிறார்கள். கேரள அரசு அவர்களுக்கு தலா 6 லட்சம் ரூபாய் நிலம் வாங்குவதற்காகவும், 4 லட்சம் ரூபாய் வீடு கட்டுவதற்காகவும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இத்தகு நிலையில் மத்திய அரசு தான் அளித்திடும் பங்குத் தொகையை உயர்த்திட நடவடிக்கை எடுக்குமா என்று அறிய விரும்புகிறேன். இத்தொகையை உயர்த்தவேண்டும் என்று கேரள அரசு சார்பிலும் மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பப் பட்டிருப்பதாக அறிகிறேன். எனவே இத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஆரிப் கோரினார்.                                    (ந.நி.)