மும்பை. ஜுன் 14- பாஜக ஆளும் மகாராஷ்ட்டிர மாநிலத்தில் 2019 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களில் 800க்கும் மேற்பட்ட விவசாயி கள் தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரலில் மட்டும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய ஊடகமான மிரர் நௌ செய்தி வெளியிட்டுள்ளது. ஜனவரிக்கும் மார்ச்சுக்கும் இடைப்பட்ட கால அளவில் 619 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை மாநில அரசு வெளி யிட்டுள்ள புள்ளிவிவரங்களே உறுதிப்படுத்தி யுள்ளன. இந்நிலையில் நான்கு மாதங்களில் 800க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக அதிர்ச்சி அளிக்கும் விவரங்கள் வெளியாகி உள்ளன. விதர்ப்பாவில் மிக அதிக அளவி லான விவசாயிகள் தற்கொலை நடந்துள் ளது. மராத்வாடா, ஓளரங்கபாத் ஆகிய இடங்களிலும் பெரிய அளவில் தற்கொலை கள் நடந்துள்ளன. நாக்பூர், நாசிக், பூனா போன்ற இடங்களிலும் இத்தகைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.