சென்னை, டிச. 20- குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் திருமாவளவன், நடிகர் சித்தார்த் உள்பட 4000 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழ கத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகி றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் அனுமதியின்றி போராட்டம் நடைபெற்றது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் ஒன்று கூடி நடத்திய போராட்டம் மிகுந்த வர வேற்பை பெற்றிருந்தது. அதனை போன்றே குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும் வள்ளு வர் கோட்டத்தில் இளைஞர்கள் திரளாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளம்பெண் களும், இளைஞர்களும் கைகளில் பதாகை களை ஏந்தி வந்திருந்தனர். அதே போன்று குடி யுரிமை சட்டத்துக்கு எதிரான அச்சிட்ட வாச கங்களை இளம்பெண்கள் பலர் கைகளில் ஏந்தி இருந்தனர்.
மாணவர்கள் பெருமளவில் பங்கேற்ற இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நடிகர் சித்தார்த், தெகலான்பாகவி, (எஸ்.டி.பி.ஐ.) வசீகரன், (ஆம் ஆத்மி) உள்பட பலர் கலந்து கொண்டனர். மொத்தம் 54 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் பங் கேற்றனர். இவர்கள் மீது சட்ட விரோதமாக கூடியது உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு. 800 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் வீடு
குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக அதி முக எம்.பி.க்கள் வாக்களித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் பட்டினப்பாக்கத்தில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் 3 ஆயிரம் பேர் பங்கேற்ற னர். முதலமைச்சரின் வீட்டை முற்றுகை யிடுவதற்காக ஊர்வலமாக சென்றனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. 2 நாட்களுக்கு முன்பு நடந்த இந்த போராட் டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தற்போது காவல்துறையினர் வழக்கு போட்டுள்ளனர். அனுமதியின்றி சட்ட விரோத மாகக் கூடியது, பேரணியாக சென்று போராட் டத்தில் ஈடுபட்டது என்பது போன்ற சட்டப் பிரிவுகளின் கீழ் 3 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.