தஞ்சாவூர், ஜூன் 11– தஞ்சையில் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க சென்ற போது, தனிப்படை காவலர் ஒருவரை அரிவாளால் வெட்டிய நபர் தூக்கிடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தஞ்சாவூர், வண்ணாரப்பேட்டை பகுதியி லுள்ள கல்லணைக் கால்வாய் பாலத்தில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றும் மணிமாறன், சுதா தம்பதியினர், கடந்த 8 ஆம் தேதி இரவு காற்று வாங்கிய படி நின்று கொண்டிருந்தனர். அப்போது இவர்களை அங்கு வந்த 3 பேர் கத்தியைக் காட்டி மிரட்டியும், பீர் பாட்டிலால் தாக்கியும் 11 பவுன் நகைகளையும், ரூ.1.25லட்சம் ரொக்கத்தையும் பறித்துச் சென்றனர். இதுகுறித்து வல்லம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்ட குற்ற ஆவணப்பிரிவு ஆய்வாளர் கருணாக ரன் தலைமையில், தனிப்படை காவல்துறை யினர் மானோஜிபட்டியில் சிலரை பிடிப்ப தற்காக புதன்கிழமை காலை 7.30 மணிக்கு சென்றுள்ளனர்.
அப்பகுதியில் இருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், கொங்கனாபாளை யத்தைச் சேர்ந்த செல்வத்தை (48) பிடித்து விட்டு, மற்றொருவரைப் பிடிக்க முயன்றனர். அப்போது மானோஜிபட்டி பொதிகை நகரைச் சேர்ந்த மணி (48) தன்னைப் பிடிக்க வந்த, காவலர் கெளதமன் (32) காலில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டார். இதில் காயமடைந்த கெளதமன் தஞ்சா வூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், தப்பியோடிய மணியை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், ரெட்டிப்பாளையம் கிராமத்தில் பேய்வாரி வாய்க்காலிலுள்ள புங்கன் மரத்தில் கைலியில் துாக்கிட்ட நிலையில் மணி உயிரி ழந்தது புதன்கிழமை தெரிய வந்தது. தகவலறிந்த கள்ளப்பெரம்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற னர். மணி இறந்த தகவலை அறிந்து அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். டாக்டர்கள் தம்பதி வழிப்பறி செய்த சம்பவத்துக்கும், எங்களுக்கும் தொ டர்பில்லை என்றும், காவல்துறையினர் வேண்டுமென்றே எங்கள் மீது வழக்குப் பதிவு செய்வதாகவும், மணியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் உறவினர்கள் தெரி வித்தனர். உயிரிழந்த மணிக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.