கும்பகோணம், அக்.23- திருபுவனம் சோழன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க 39 ஆவது மகாசபை கூட்டம் புதனன்று திருபுவ னத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் சிங், எஸ்.செல்வ ராஜ் தலைமை வகித்தார். மேலாண் இயக்குனர் கே மோகன் அனைவரையும் வரவேற்றார் கும்ப கோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆசை மணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே. பாரதி மோகன், சரக உதவி இயக்குநர் எம்.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கூட்டத்தில் அங்கத்தினர் ஏரா ளமானோர் கலந்து கொண்டனர். அப்போது சோழன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் சிங். செல்வராஜ் தெரி வித்ததாவது: திருபுவனம் சோழன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க நெசவா ளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட கலைத்திறன் மிக்க பட்டுப் புடவைகள் விற்பனையில் பெயர் பெற்றது ஆகும். அதில் நான்காயிரம் முதல் லட்சம் வரை வாடிக்கையாளர்கள் எண்ணத்திற் கேற்ப பலவண்ண அதிநவீன டிசைன் களில் பட்டுப் புடவை உற்பத்தி செய் யப்பட்டு குறைந்த விலையில் விற் பனை நடைபெற்று வருகிறது. இதற்கு வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வர வேற்பு பெற்றுள்ளது இச்சங்கத்தின் 39 ஆவது மகாசபை கூட்டம் இன்று (புதன்) நடைபெற்றது. சங்க அங்கத்தினர்களுக்கு பண் டிகை கால 18 சதவிகித போனஸ் வழங் கப்பட்டது. மேலும் 50 சதவீத அட் வான்ஸ் தொகையும் வழங்கப்பட்டது. மேலும் தீர்மானங்களாக சங்க உறுப்பினர் குடும்பங்களுக்கு மருத் துவ சிகிச்சை அளிப்பதற்கு பகுதி நேர மருத்துவமனை சங்கத்தின் மூலம் செயல்படுத்துவதற்கு தேவையான நிதி வசதிகள் சங்கத்தின் போதுமானதாக இல்லாத காரணத்தால் மேற்படி பகுதி நேர மருத்துவமனை துவங்குவதற்கு தமிழக அரசிடம் நிதி உதவி கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் சென்னை, கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் கும்பகோணம் ஆகி யோர் மூலமாக கேட்டுக்கொள்வது, சங்கத்தின் 60 வயது முதிர்வடைந்த உறுப்பினர்களுக்கு முதியோர் ஓய்வூ தியத் தொகையாக மாதம் ஒன்றுக்கு 1,000 அரசால் வழங்கப்பட்டு வரு கிறது. இதனை மாதம் ஒன்றுக்கு 2,000 ஆக உயர்த்தி வழங்க அரசு கேட்டுக் கொள் வது எனவும் சங்கத்தின் விற்பனை இலக்கு ரூ.10 கோடியாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது சங்கத்தின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடனில் பட்டு சேலைகள் விற்பனை மேற்கொள்ளவும் கடன் விற்பனை தொகையினை அவர்கள் பெரும் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து சங்கத்தில் செலுத்த ஏதுவாக சம்பந்தப் பட்ட துறை அலுவலர்கள் அனுமதி பெற வும் மேற்படி கடன் விற்பனைக்கு அனு மதி வழங்குமாறும் கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அதிகாரிகளை கேட்டுக் கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதேபோல் எங்கள் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான மழை கால மான ஆடி, புரட்டாசி, ஐப்பசி மாதங்க ளில் கைத்தறி நெசவு தொழில் மிகவும் செய்யமுடியாமல் நெசவாளர்கள் வறுமையில் உள்ளார்கள். அவர்கள் வாழ்வாதாரத்திற்காக மழை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கும் நிதி உதவி போல் நெசவாளர்களுக்கு மழைக் காலங்களில் நிதி உதவி அளித்திட வேண்டும் என அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. இத்திட்டம் ஆந்திர அரசால் அறிவிக்கப்பட்டு நடை முறைக்கு வந்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும். எனவே உடனடியாக பரி சீலனை செய்து நெசவாளர்களுக்கு உதவிட வேண்டும் எனவும் தெரிவித் தார். பேட்டியின்போது சங்க மேலாண் இயக்குனர் கே மோகன், மேலாளர் ஆர். ராஜன், துணைத் தலைவர் எஸ்.வைர வேல், இயக்குநர் எம்.பி.ஆத்மா ராமன், ஆர்.ஆனந்தன், கே.பி.ராஜம், எஸ்.கமலா, டி.முத்துலட்சுமி ஆகியோர் உட னிருந்தனர்.