தஞ்சாவூர், ஆக.6- தஞ்சாவூர் மாவட்டத்தில், விவ சாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மைத்துறை, பட்டுப்புழு வளர்ப்புத் துறை மற்றும் தோட்டக் கலைத் துறையுடன் இணைந்து விவசாயிகளின் தரிசு நிலங்கள், கழிவு நிலங்களை சாகுபடிக்கு ஏற்ற வகையில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் விளைநிலங்களில் மண்ணி னால் வரப்பு அமைத்து மரக்கன்று களை நடுதல், உரக்குழி அமை த்தல், தனிநபர் விவசாய கிணறு அமைத்தல், தனிநபர் விளைநிலங்க ளில் பழ மரக்கன்றுகள் நடுதல், விவசாயம் மற்றும் மீன் வளர்ப்பு பண்ணைக் குட்டை அமைத்தல் போன்ற பணிகளில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்க ளை ஈடுபடுத்தி பணிகள் செயல் படுத்தப்பட உள்ளன.
மேலும், குறைந்தது 1 முதல் 2 ஏக்கர் வரை சொந்த நிலம் உள்ள விவசாயிகளை கண்டறிந்து, அதில் தாழ்த்தப்பட்ட வகுப்பு-பழங்குடியி னர் குடும்பங்கள், பெண்களை தலைவராக கொண்ட குடும்பங்கள் மற்றும் சிறு, குறு விவசாயிகள் தேர்வு செய்யப்படுவர். எனவே இத் திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாய மக்கள், வட்டார அளவி லான ஊராட்சி ஒன்றியங்கள், வேளாண் துறை, தோட்டக் கலைத் துறை மற்றும் தொடர்புடைய ஊராட்சி மன்ற அலுவலகங்களை தொடர்பு கொண்டு தங்களது விவரங்களை பதிவு செய்து பயனடையலாம். மேலும், இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு இலவச தொலைபேசி எண் 1800-4252-187-ல் தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.