tamilnadu

அரசு கொள்முதல் நிலையத்தில் முறைகேடாக வெளிமாவட்ட நெல் விற்பனை: இருவர் கைது

தஞ்சாவூர், பிப்.23- தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை பணி முழு வீச்சில் நடைபெறு கிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யும் பணி மேற் கொள்ளப்படுகிறது. இதில் மாவட்டத்தில் பல இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மணிகள் கொட்டி குவித்து வைக்கப்பட் டுள்ளன. நாளொன்றுக்கு 700 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால், வாரக்கணக்கில் விவசாயிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதற்கிடையே எவ்வித தங்கு தடை யிடின்றி வெளிமாவட்ட நெல் விற்பனை, கொள்முதல் பணியாளர்களின் துணை யோடு நடைபெறுகிறது என வெள் ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரி வித்தனர். இதையடுத்து சனிக்கிழமை பேரா வூரணி அருகே ஊமத்தநாடு கொள்முதல் நிலையத்துக்கு திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நெல் மூட்டைகளை விற் பனை செய்ய லாரியில் நெல் கொண்டு வரப் படுவதாக ஆட்சியர் ம.கோவிந்தராவுக்கு விவசாயிகள் தகவல் அளித்தனர்.  இதையடுத்து பேராவூரணி வட்டாட்சி யர், அங்கு சென்று முறைகேடாக 256 நெல் மூட்டைகளை விற்பனை செய்ய வந்ததை கண்டுபிடித்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த ரத்தினம் மற்றும் வாகன ஓட்டு நர் முனியன் ஆகியோரையும், நெல் மூட்டை களையும், லாரியையும் பறிமுதல் செய்த னர். இதையடுத்து காவல்துறையினர், இரு வரையும் கைது செய்தனர். வெளிமாவட்ட விவசாயிகள், வியாபாரி களின் நெல் இந்த மாவட்டத்தில் விற்பனை செய்ய முடியாது. இதுபோன்ற நடவடிக்கை யில் வெளிமாவட்ட விவசாயிகள், வியாபாரி கள் யாரும் ஈடுபட வேண்டாம், இதற்கு கொள்முதல் நிலைய பணியாளர்கள் யாரும் துணை போக வேண்டாம். அவ்வாறு நிகழ்ந் தால் கொள்முதல் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.