tamilnadu

தீக்குளிக்க முயற்சி

தஞ்சாவூர், மார்ச் 9- தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர், மேலக்குளக் கரையை சேர்ந்த சம்பத் மனைவி சிவப்பிரியா (38) என்பவர், தனது மகன் பாலா ஜியை கடந்த 22.02.2020, ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள சிலர்கள் அடித்ததால், கால் உடைந்த மருத்துவ மனையில் உள்ளார். இது தொடர்பாக மெலட்டூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து சரியான நடவடிக்கை எடுக்கவில்லை, எனக் கூறி, தாய் முத்துலெட்சுமி (58), தங்கை தனலெட்சுமி (35), ஆகிய மூவரும் ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.  மனு அளிக்க செல்லும் முன்பாக, ஆட்சியர் அலு வலக வளாகத்தில் சிவப் பிரியா மண்ணெண்ணெய் தனக்கு தானே ஊற்றிக் கொண்டும், மற்றும் தன் தங்கை மேலும் ஊற்றி தீக் குளிக்க முயன்றார். அங்கி ருந்த காவலர்கள் இருவரை யும் மீட்டு அங்கிருந்து அழைத்து சென்றனர்.

;