தஞ்சாவூர் டிச.4- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பத்திரப்பதிவு அலு வலகத்தில் கோகனட் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் மரக் கன்றுகள் நடும் விழா நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு கோகனட் சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவர் எம்.நீலகண்டன் தலைமை வகித்தார். செயலாளர் வி.ஜெய் சங்கர் வரவேற்றார். லயன்ஸ் மண்டலத் தலைவர் ஜாய் செந்தில், சார்பதிவாளர் எஸ்.இ. வாசுதேவன், லயன்ஸ் சங்க பொருளாளர் எஸ்.மைதீன் பிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பத்திரப்பதிவுத் துறை மாவட்டப் பதிவாளர் (தணிக்கை) சி.அருள்ஜோதி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். 50க்கும் மேற்பட்ட கன்று நடப்பட்டது. பின்னர், லயன்ஸ் சங்க ஏற்பாட்டில் அலுவலக வளா கத்தில் மண்டிக் கிடந்த புதர்க ளை அகற்றி, தூய்மைப் படுத்தும் பணி தொடங்கியது. தொடர்ந்து உதயம் விழா அரங்கில் மழை யால் பாதிக்கப்பட்ட 200 க்கும் மேற்பட்ட யாசகர்கள், ஏழைக ளுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில், வ.பாலசுப்பிர மணியன், எஸ்.பாண்டியராஜன், கோவிந்தன், பி.மணிகண்டன், யு.பெருமாள், எம்.சரவணன், பி.ரமேஷ், குமார் என்ற பழனி வேலு, பி.பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.