தஞ்சாவூர், ஆக.20- தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பயிர் பதன தொழில் நுட்பக் கழகத்தில் செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக் கோட்டை ஆகிய நகராட்சி பகுதிகளில் விற்பனை செய்யும் சாலை யோர உணவு வியாபாரிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு இந்திய உணவு பயிர் பதன தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் சி. அனந்த ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணை யர் பி.ஜானகி ரவீந்திரன், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலு வலர் கே.சி.அருண் ஆகியோர் முன்னிலை வகித்தார். பயிற்சியை தொடங்கி வைத்து உணவு பதனிடும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணை செயலாளர் அசோக்குமார் பேசினார்.