tamilnadu

கொரோனா தொற்று தீவிரத்தால் தளர்வு இல்லை கும்பகோணத்தில் மீண்டும் கடைகள் அடைப்பு பொதுமக்கள், வியாபாரிகள் ஏமாற்றம்

கும்பகோணம், மே 13- கொரோனா பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கும்பகோணத்தில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கு நீடிக்கப்பட்ட நிலை யில் சில தளர்வுகளை தமிழக அரசு அறி வித்தது. இதில் திங்கட்கிழமை 34 விதமான வியாபார நிறுவனங்கள் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து செயல்படாமல் தெரிவிக்கப் பட்டது.  இதனை தொடர்ந்து கும்பகோணத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப் பட்டன. கும்பகோணம் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதி மக்கள் கும்பகோணம் வந்து கடை களில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினர்.

இந்த நிலையில் கும்பகோணம் நகராட்சி அதிகாரிகள், நகரில் திறந்திருந்த கடைகளை அடைக்க சொல்லி உத்தரவிட்டனர். அவர்களிடம் வியாபாரிகள் அரசின் உத்தர வின்படியே கடைகளை திறந்துள்ளோம். அதனால் நாங்கள் கடைகளை அடைக்க முடி யாது என கூறினர். இதனால் குழப்பமான நகராட்சி அதிகாரிகள் காவல்துறையின் உதவியை நாடினர். இதையடுத்து நகரின் முக்கிய பகுதிக்கு வந்த காவல்துறையினர், உடனடியாக கடைகளை மூடச் சொல்லினர். இதனால் அதிருப்தி அடைந்த  வியாபாரிகள் அனைத்து வணிக சங்க நிர்வாகிக ளுடன் கும்பகோணம் நகராட்சி ஆணையர் லெட்சுமியை சந்தித்து தங்களது நிலையை விளக்கி கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என கோரினர். அவர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆணையர் லட்சுமி, வியாபாரிகளின் கோரிக்கையை நிராகரித்தார்.

கும்பகோணம் நகராட்சி பகுதி முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ளது. இதனால் தான் மற்ற இடங்களில் 7-ந் தேதி டாஸ்மாக் திறந்த போதும் கூட இங்கு திறக்க அனுமதிக்கவில்லை. அதே போல மற்ற நக ரங்களில் ஊரடங்கு தளர்வு இருந்தாலும் இந்த நகரத்தில் தளர்வு அளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை. எனவே வருகிற 17-ந் தேதி வரை வழக்க மான கட்டுப்பாடுகளுடன் முந்தைய ஊரடங்கு நிலையே தொடரும். அத்தியாவசிய பொருட்க ளுக்கான கடைகள் தவிர மற்ற எந்தவொரு கடை யும் திறக்க அனுமதியில்லை என கூறினார். இத னால் கும்பகோணத்தில் உள்ள வியாபாரிகள், மதியம் 2 மணி அளவில் திறந்திருந்த அனைத்து கடைகளையும் அடைத்தனர். இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு கடைகளில் பொருட்களை வாங்க வந்த பொதுமக்களும், கடைகளில் வேலைக்கு வந்த ஊழியர்களும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

;