தஞ்சாவூர், ஜூலை 31- திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களும், தொழில்நுட்ப பணியாளர்களும் இல்லாததால், மகப்பேறு மருத்துவமனை பூட்டியே கிடக்கிறது. இதனால் இங்கு சிகிச்சைக்கு வரும் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்ற னர். தஞ்சாவூர் மாவட்டம் திருக் காட்டுப்பள்ளியில் அரசு மருத்துவ மனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு திருக்காட்டுப் பள்ளி, விண்ணமங்கலம், செந் தலை, வரகூர், தோகூர் என 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்து வமனையில் 4 மருத்துவர்கள் பணி யில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது ஒரு ஆண், ஒரு பெண் என இருவர் மட்டுமே பகல் நேர பணியில் உள்ளனர். மேலும், இந்த மருத்துவ மனையில் கடந்தாண்டு மகப்பேறு பிரிவுக்கு புதிய கட்டிடம் கட்டப் பட்டது. ஆனால் மகப்பேறு மருத்து வர் இல்லாததால், இந்த கட்டிடம் ஓராண்டாக பூட்டியே கிடக்கிறது. திருக்காட்டுப்பள்ளிக்கு மகப்பேறு சிகிச்சைக்கு வரும் பெண்களை, அங்குள்ள பணியா ளர்கள், பூதலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், தஞ்சாவூர் இராசா மிராசுதார் மருத்துவமனைக் கும் சிகிச்சைக்கு சென்றுவிடுங்கள் என அனுப்பி வைக்கின்றனர். மேலும் மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் யாரும் இல்லாததால் இரவு நேரம் அரசு மருத்துவமனை முழுமையாக பூட்டப்படுகிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வழக்கறி ஞர் வெ.ஜீவக்குமார், பூதலூர் வடக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் கே. காந்தி ஆகியோர் கூறுகையில், திருக்காட்டுப்பள்ளி பகுதி முழு வதும் கிராமப்புறங்களை சார்ந்த பகுதியாக உள்ளது. இங்குள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்க ளுக்கான மருத்துவ வசதியை திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவ மனைதான் வழங்குகிறது. ஆனால் போதிய மருத்துவர் களும், செவிலியர் உள்ளிட்ட தொழில்நுட்ப பணியாளர்களும் இல்லாத காரணத்தால் மருத்து வமனையில் பொதுமக்களுக்கு முத லுதவி சிகிச்சை கூட கிடைப்ப தில்லை. இரவு நேரம் முழுமை யாக மருத்துவமனை மூடப்படுகிறது. இந்த மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல் உடற்கூரா ய்வு செய்ய மேற்பார்வை மருத்து வர்கள் இல்லை. உடற்கூராய்வு செய்ய அதற்கான மருத்துவரை அய்யம்பேட்டை, ஒரத்தநாடு ஆகிய இடங்களிலிருந்து கார் மூலம் அழைத்து வரும் செலவினை பொது மக்களே ஏற்றுக் கொள்ள வேண்டி இருப்பதால், இந்த மருத்துவமனை யில் உடனடியாக மேற்பார்வை மருத்துவரை நியமிக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட மருத்துவப்பணிகள் (சுகா தாரம்) இணை இயக்குநர் ஏ.காந்தி கூறுகையில், திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் தற்போது மூன்று மருத்துவர்கள் உள்ளனர். இதில் வாரத்துக்கு ஒரு மகப்பேறு மருத்துவர் பூதலூரிலிருந்து வந்து செல்கிறார். சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட ஒரு சில பணியிடங்கள் காலியாக உள்ளன. அவையும் விரைவில் நிரப்பப்பட உள்ளது. தாலுகா மருத்துவமனைகள் மட்டுமே இரவு நேரமும் இயங்கும், இவை கிராமப்புற மருத்துவ மனை என்பதால், இரவு நேரங்க ளில் மருத்துவர்கள் இருக்கமாட் டார்கள். வேறு இடத்திலிருந்து வர வழைக்கப்பட்டு சிகிச்சை அளிக் கப்படும். மகப்பேறு பிரிவு பகல் நேரத்தில் திறக்கப்பட்டு பெண் களுக்கு பரிசோதனை செய்யப் பட்டு வருகிறது என்றார்.