தஞ்சாவூர், மே 25- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஆவணம் பதுப்பட்டினம் 19 ஆம் நம்பர் வாய்க்கால் கரையில் சுமார் 80 ஆண்டு கால பழமையான மருத்துவ குணமுள்ள மருதமரம் உள்ளிட்ட பல்வேறு வகை யான மரங்கள் உள்ளன. இந்த மரங்களை சிலர் வெட்டிக் கடத்துவதாக ஆவணம் பெரியநாயகிபுரம் கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கிராமத்தி னர் அங்கு சென்று பார்த்த போது பதுக்கோட்டை மாவட்டம் அணைவயல் தடியமனையைச் சேர்ந்த சாமியார் கணேசன், கீரமங்கலம் பழனி, வட காட்டைச் சேர்ந்த குமரேசன் ஆகியோர் மரங்களை வெட்டி கடத்தியது தெரியவந்தது. மூவரையும் கிராம மக்கள் சிறைபிடித்தனர். இதையறிந்து சம்பவ இடத்தி ற்கு வந்த வனத்துறையினர், இதுகுறித்து திருச்சிற்றம் பலம் காவல்நிலையத்தில், அனுமதியின்றி மரங்களை வெட்டியதாக புகார் தெரிவித்துள்ளனர். பல லட்சம் மதிப்புள்ள சுமார் 84 மரங்கள் வெட்டப் பட்டதில் பாதிக்கு மேற்பட்ட வை தூத்துக்குடிக்கு கடத் தப்பட்டதாக கூறப்படுகிறது.