tamilnadu

img

மரணமடைந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்தினருக்கு நல நிதி வழங்கல்

கும்பகோணம் ஜூலை 25-  தஞ்சாவூர் மாவட்டம் மதுபானக் கடை ஊழியர் சங்கம்(சிஐடியூ)சார்பாக, பணியில் இருந்தபோது மறைந்த ஊழியர் குடும்பத்தி ற்கு குடும்ப நிதி வழங்கி வருகிறது. அதன்  தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் வட்டம் ஆடுதுறை மதுபானக் கடை  எண் 7933 ல் விற்பனையாளராக பணிபுரிந்த எம்.சிவபிரகாஷம் கடந்த 10.6.2019 அன்று மர ணம் அடைந்தார்   அதனால் அவரது குடும்பம் மிகவும் கஷ்ட ப்பட்டு வந்த நிலையில் அவரது குடும்ப த்திற்கு நிதி உதவியாக பத்தாயிரம் ரூபாய் டாஸ்மாக் ஊழியர் சங்க (சிஐடியு) நிர்வாகி கள் சார்பாக 23.7.2019 அன்று அவரது இல்ல த்திற்கு நேரில் சென்றனர். சிஐடியு தஞ்சை மாவட்ட செயலாளர் சி.ஜெயபால்  சிஐடியு சங்கம் டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் நிர்வா கிகள் வீரையன் ஜே. ரமேஷ் க மதியழகன் எஸ். ஆறுமுகம் எம்.சரவணன் ஜெகதீசன், பன்னீர்செல்வம் பாண்டியன், குணசேகரன் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் சா.ஜீவ பாரதி மாவட்ட துணை செயலாளர் ஆர் சேகர் ஆகியோர் இந்த நிதி உதவியை அவர்களது மனைவி, மகன்களிடம் வழங்கினார்கள்  மேலும் சிஐடியு தஞ்சை மாவட்டச் செய லாளர் சி ஜெயபால் கூறியதாவது, அரசு மதுபானக் கடையில் பணியாற்றும் ஊழி யர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் இது போன்று ஊழியர்கள் இறப்பு ஏற்படும் பொழுது ஊழியர்களின் குடும்ப நிதியாக இழப்பீட்டுத் தொகையாக 25 லட்சமும் அவ ரது வாரிசுகளுக்கு அரசு வேலையும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.