tamilnadu

புதிய கட்டளை மேட்டு  வாய்க்காலில் நீர் திறப்பு 

தஞ்சாவூர் ஆக.29- தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்ட விவசாயிகளின் பாசனத் தேவைக்காக கரூர் மாவட்டம் மாயனூர் கிராமம் காவிரி ஆறு வலதுகரை புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் புதன்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது.  புதிய கட்டளை மேட்டு வாய்க்காலின் மொத்த நீளம் 133.8 கி.மீ ஆகும். இவ்வாய்க்கால் மூலம் தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் நேரடி பாசனமாக 11,198 ஏக்கரும் 107 குளங்கள் மூலமாக 9,464 ஏக்கரும் என மொத்தம் 20,662 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெருகிறது.  137 நாட்களுக்கு புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தேவைக்கேற்ப தண்ணீர் வழங்கப்படும். புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நல்ல மகசூல் பெறவேண்டும்” என தஞ்சாவூர் ஆட்சியர் தெரிவித்தார்.