tamilnadu

img

மேட்டூர் அணை நிரம்பியும் கல்லணை திறக்கப்பட்டும் கடைமடையை வந்து சேராத தண்ணீர்

தஞ்சாவூர், செப்.11-  மேட்டூர் அணை மூன்று முறை நிரம்பிய நிலையிலும், டெல்டா பாச னத்திற்காக கல்லணை திறந்து 25 நாட்களுக்கு மேலாகியும் கடை மடையை தண்ணீர் வந்தடைய வில்லை. சேதுபாவாசத்திரம் கடை மடைப் பகுதிகளில் சிறிய குளங்க ளில் கூட ஒரு சொட்டு தண்ணீர் நிரப்ப முடியாத அவலம் உள்ளது. முறை வைத்து தண்ணீர் வழங்கப்படுவதே இதற்கு காரணம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டி யுள்ளது.  தஞ்சை மாவட்டம் சேதுபாவா சத்திரம் கடைமடைப் பகுதிகளில், கடந்த ஐந்து வருடங்களாக சாகுபடி கிடையாது. அதேசமயம் பட்டுக் கோட்டை, பேராவூரணி பகுதிகளை மழையும் வஞ்சித்து விட்டது. இத னால் இந்த பகுதியில் உள்ள ஏரி, குளங்களும் கடந்த ஐந்து ஆண்டு களாக வறண்ட நிலையிலேயே உள் ளன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பல இடங்களில் ஆழ்குழாய் கிணறு கள் நின்றுவிட்டன. வாழ்வாதார மாக கருதிய தென்னை மரங்களும் கஜா புயலில் அழிந்துவிட்டது.  இதுகுறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் வீ.கருப்பையா கூறுகையில், கடந்த ஆண்டு மேட்டூர் அணை இரண்டு முறை நிரம்பியும் கல்லணையில் இருந்து உபரிநீர் 2 லட்சம் கன அடிவரை கடலுக்கு திறந்துவிடப் பட்ட போதும், கடைமடைக்கு 5 நாட் கள் வீதம் முறைவைத்து தண்ணீர் வழங்கப்பட்டது. முழு கொள்ளளவு தண்ணீர் வழங்காததால் கடை மடைப் பகுதியின் கடைசி வரை தண்ணீர் எட்டிப் பார்க்கவில்லை.  இதனால் கடந்தாண்டும் சாகு படி முழுமையாக நடைபெற வில்லை. அதே சமயம் இந்தாண்டு கடந்த மாதம் 14 ஆம் தேதி மேட் டூர் அணை திறக்கப்பட்டு 25 நாட்க ளுக்கு மேலாகிறது. மூன்று நாட்கள் வீதம் முறை வைத்து வழங்கப்படும் தண்ணீர் ஒருநாள் கூட முழுமை யாக கிடைக்கவில்லை. கடைமடை யில் உள்ள 5-ம் எண், 6-ம் எண் வாய்க்கால்களின் கடைசிவரை தண்ணீர் சென்றடையவில்லை. கடைமடை வாய்க்கால்கள் வறண்ட நிலையில் உள்ளன. கடைமடையில் 10-க்கும் மேற் பட்ட பெரிய ஏரிகளும், சுமார் 300க்கும் மேற்பட்ட சிறு,சிறு குளங்க ளும் உள்ளன. பெரிய ஏரிகள் மட்டு மின்றி சிறு குளங்களில் கூட ஒரு சொட்டு தண்ணீர்கூட நிரப்ப முடிய வில்லை. கடைமடையில் தற்போது பரவலாக மிதமான மழை பெய்துள் ளது. இதனை பயன்படுத்தி, முறை வைக்காமல் தண்ணீர் வழங்கினால் மட்டுமே கடைமடையை தண்ணீர் எட்டிப்பார்க்கும் என தெரிவித்தார்.