tamilnadu

img

மே 22-ல் மத்திய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து போராட்டம்

தஞ்சாவூர், மே 19- ஊரடங்கு காரணமாக பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஆதரவாக செயல்படு வதற்கு பதிலாக, மத்திய அரசு கொரோ னாவை பயன்படுத்தி கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு ஆதரவான நிலையை மேற்கொண்டு வருகிறது. எளிய நடுத்தர மக்கள், ஒட்டுமொத்த தொழிலாளர்கள், களத்தில் செயலாற்றி வருகின்ற அரசுப் பணியாளர் உள்ளிட்ட உழைக்கும் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.   இந்தியாவிலுள்ள அனைத்து தொழிற் சங்கங்களும், மத்திய அரசினுடைய ஜன நாயக விரோத தன்னிச்சையான நட வடிக்கைகளை கண்டித்தும், மோசமான செயல்பாடுகளை கைவிட வலியுறுத்தியும் இந்தியா முழுவதும் வருகிற மே 22- ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளன. தஞ்சை மாவட்டத்தில் 500 இடங்களில் போராட்டம் நடத்த அனைத்து  தொழிற்சங்க ஆலோச னைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  

தஞ்சை கீழராஜ வீதி ஏஐடியுசி மாவட்ட அலுவலகத்தில் ஐஎன்டியூசி மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் தலைமையில், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இக்கூட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், ஏஐடியூசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார், எல்.பி.எஃப் மாவட்டச் செயலாளர் கு.சேவியர், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஆர்.தில்லைவனம், மாவட்டத் தலைவர் சேவையா, துணைச் செயலாளர் துரை. மதிவாணன், நிர்வாகி கள் தி.கோவிந்தராஜன், ஆர்.பி.முத்துக் குமரன், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே. கல்யாணி, கே.அன்பு, எஸ்.செங்குட்டுவன், வங்கி ஊழியர் சங்கத் தலைவர் க.அன்ப ழகன், ஐஎன்டியுசி ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் ஏ.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள, ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூபாய் 7,500 நிவாரணம் வழங்க வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவதை கைவிட வேண்டும்.  பொதுத்துறையை தனியாருக்கு தாரைவார்ப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். 8 மணி நேர வேலையை 12 மணி நேரம் என்று உயர்த்துதல், தொழிலா ளர்களுக்கு எதிரான பல்வேறு சட்டங்கள் முற்றிலுமாக நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கையை பல்வேறு மாநில அரசுகள் எடுத்திருக்கின்றன. குடியரசுத்தலைவர் இதற்கெல்லாம் ஒப்புதல் அளிக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி,  போக்குவரத்து, மின்சாரம், நுகர்பொ ருள், அங்காடி, ஆட்டோ, கட்டுமானம், கைத்தறி, முறைசாரா தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் சார்பில் மே 22 தஞ்சை மாவட்டத்தில் 500 இடங்களில், சமூக விலகலை கடைபிடித்து, மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது” என முடிவு செய்யப்பட்டது.