tamilnadu

img

திறந்து விடப்பட்ட பாசன நீர் வாய்க்கால் கரை உடைப்பால் வீணாகியது

தஞ்சாவூர் செப்.6- தஞ்சை பாபநாசம் அருகே மேட்டுத் தெரு கிராமத்தில் காவிரி ஆற்றிலிருந்து கொங்கன் வாய்க்கால் பிரிகிறது. இந்த வாய்க்கால் மூலம் கருப்பூர், கபிஸ்தலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை கொங்கன் வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 80 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது மதகினையொட்டி இடதுகரையில் சுமார் மூன்று மீட்டர் நீளத்துக்கு கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது. தண்ணீர் தொடர்ந்து வாய்க்காலை விட்டு வெளியேறி வயல் பகுதியில் பாய்ந்தது. தகவலறிந்து வந்த பொதுப்பணி த்துறை பணியாளர்கள் உடை ப்பை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். தற்காலிகமாக தண்ணீர் வெளியேறுவதை கட்டு ப்படுத்தினர். இதையடுத்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரை கல்லணையிலும், திருக்காட்டுப்பள்ளியிலும் குறைத்து வெண்ணாறு, குடமுறுட்டி ஆறுகளில் திருப்பி விட்டனர். உடைப்பு ஏற்பட்ட இடத்தினை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளதாக கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் தெரிவித்தார்.