தஞ்சாவூர், செப்.5- தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம், பம்பிங் ஸ்டேஷன் பகுதியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் முயற்சி காரணமாக மாநகராட்சி அதி காரிகள் குடிநீர் குழாய் அமைத்து தண் ணீர் வழங்கினர். தஞ்சாவூர் நகருக்கு கடந்த 1895 முதல் சுமார் 124 ஆண்டுகளாக பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் இருந்து, நீரேற்று நிலையம் மூலம் தஞ்சை நகராட்சி பகுதி முழுவதும் குடிதண்ணீர் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. இந்நிலையில் பம்பிங் ஸ்டேஷன் அருகில் உள்ள பொது மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக முறையாக குடிநீர் விநியோகம் செய் யப்படவில்லையாம். இதனால் இப் பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்தியும், மாவட்ட ஆட்சியர், மாநக ராட்சி ஆணையர் என பலரிடமும் மனு அளித்தும் முழுமையான தீர்வு காணப் படவில்லை. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் காலிக்குடங்களுடன் ஏராளமான பெண்கள், மாநகரக்குழு உறுப்பினர் சி.ராஜன், 1ஆவது வார்டு பம்பிங் ஸ்டேஷன் பகுதி கிளைச் செயலாளர் கே.ஜெனிபர் கென்னடி, மாநகரச் செயலாளர் என்.குருசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. செந்தில்குமார், மாநகரக்குழு எஸ்.மனோகரன், எல்.துரை, ஏ.கே.சுந்தர், எம்.கோஸ்கனி, சி.ராமு, இ.வசந்தி, எஸ்.சாந்தா உள்ளிட்டோர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் திரண்டனர். இதையடுத்து மாநகராட்சி பொறி யாளர் மற்றும் காவல்துறையினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரி டம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதில், ‘இரண்டு தினங்களுக்கு லாரி மூலம் குடிதண்ணீர் வழங்குவது, உடனடியாக குழாய் அமைத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும்’ என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி அதிகாரி கள் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பணி கள் நிறைவடைந்த நிலையில் கடந்த இரு தினங்களாக இப்பகுதியில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாந கரச் செயலாளர் என்.குருசாமி, மாநக ரக்குழு உறுப்பினர் சி.ராஜன் ஆகியோர் 1 ஆவது வார்டு பம்பிங் ஸ்டேஷன் பகு தியில் நேரில் சென்று பார்வையிட்ட னர். குடிநீர் வசதி கிடைக்க போராடி, பெற்றுத் தந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினருக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.