அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் வகுப்புகள் தொடக்கம்
தஞ்சாவூர், ஆக.7- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை அடுத்துள்ள ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் 2019-20-ம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி புல முதல்வர் ஜி.இளங்கோவன் தலைமை வகித்து தொடக்க உரையாற்றினார். கல்லூரி கணித வியல் துறைத் தலைவர் பேராசிரியை என்.கவிதா வர வேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில், காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ.முகமது அப்துல் காதர் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஏ.வி.சி. கல்லூரியில் கருத்தரங்கு
மயிலாடுதுறை, ஆக. 7 - மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏ.வி.சி.கல்லூரி தமிழாய்வுத் துறையின் திண்ணை அமைப்பின் சார்பில் ‘சிவபுராணத்தில் சிவஞானபோதம்’ என்ற கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதற்கு தமிழாய்வுத்துறை பேராசிரியர் முனைவர் ந.சர வணன் தலைமை வகித்து, சைவ நூல்கள் சமயக்குர வர்கள், சந்தானக் குரவர்கள் பற்றி பேசினார். தமிழாய்வுத் துறைத் தலைவர் முனைவர் சு.தமிழ்வேலு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பூம்புகார் கல்லூரி விலங்கி யல் துறையின் முன்னாள் துறைத் தலைவர் இர.சம்பந்த மூர்த்தி கலந்து ‘சிவத் தத்துவம்’, சைவ சமயத்தின் பெரு மைகள், சிவபுராணமும் சிவஞான போதமும் குறித்தும், மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து சைவத் தத்துவத்தின் நுணுக்கமான உண்மைகளை விளக்கி பேசினார். இதில் ஓய்வுபெற்ற காவல்துறை ஆய்வாளர் பழனிவேல் கருத்துரை வழங்கினார். இதில் பேராசி ரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு குறைதீர் முகாம்
பொன்னமரவாதி, ஆக.7- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தூத்தூர் கிராமத்தில் தமிழக முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் வட்டாட்சியர் பாலகிருஷ்ணனின் தலைமை யில் நடைபெற்றது. இம்முகாமில் முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல் என பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன. இதில் துணை வட்டாட்சி யர் வெள்ளைச்சாமி, வட்ட துணை ஆய்வாளர் செந்தில் குமார், வருவாய் ஆய்வாளர் ஜோதி, கிராம நிர்வாக அலு வலர்கள் விஜயா, ஆரோக்கியராஜ், கிராம நிர்வாக உதவி யாளர் யாசர் அராபத், பாலையா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆக.10 குடிமைப் பொருள் குறைதீர் கூட்டம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
திருவாரூர், ஆக.7- திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத் தினை மேம்படுத்திடும் வகையில் திருவாரூர் வட்டத்தில் எண்கண் கிராமத்தில் திருவாரூர், வருவாய்க் கோட்ட அலுவலர் தலைமையிலும், நன்னிலம் வட்டத்தில் மகராஜ புரம் கிராமத்தில் திருவாரூர், சரக துணைப் பதிவாளர் தலை மையிலும், குடவாசல் வட்டத்தில் 51, புதுக்குடி கிரா மத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் தலைமையிலும், வலங்கைமான் வட்டத்தில் களத்தூர் கிராமத்தில் திருவாரூர், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் தலைமையிலும், நீடா மங்கலம் வட்டத்தில் கோவில்வெண்ணி கிராமத்தில் திரு வாரூர், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், மன்னார்குடி வட்டத்தில் ஆதிச்சபுரம் கிராமத்தில் மன்னார்குடி, வருவாய்க் கோட்ட அலுவலர் தலைமையிலும் நடைபெறும். திருத்துறைப்பூண்டி வட்டத்தில் கொக்கலாடி கிரா மத்தில் மன்னார்குடி, சரக துணைப் பதிவாளர் தலைமை யிலும், கூத்தாநல்லூர் வட்டத்தில் வடபாதிமங்கலம் கிரா மத்தில் திருவாரூர், நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிட் துணைப் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தலைமையிலும் பொது விநி யோகத் திட்ட சிறப்பு பொது மக்கள் குறை கேட்கும் கூட்டம் ஆகஸ்ட் 10-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, தொடர்புடைய பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் பொது விநியோகத் திட்ட அங்காடிகளின் செயல்பாடுகள் குறித்தும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்றவைகள் குறித்தும், கடை மாற்றம், முகவரி மாற்றம் போன்றவை குறித்தும் தங்களது கோரிக்கை மனுக்களை இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்து பயன் பெறலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
தஞ்சாவூர், ஆக.7- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனை யில் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரெ. பரமசிவம் தலைமை வகித்தார். மாற்றுத் திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் டி.ரவீந்திரன் முன்னிலை வகித்தார். சட்ட மன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசி னார். மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக், வட்டாரக் கல்வி அலுவலர் கோ.ரவிச்சந்திரன், தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பாஸ்கர் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 173 மாற்றுத் திறனாளிகள் குழந்தைகள் மருத்துவ மதிப்பீடு, தேசிய அடையாள அட்டை, நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவிக் கருவிகளை பெற்றுக் கொண்டனர்.