tamilnadu

தஞ்சாவூர், அரியலூர், கரூர் முக்கிய செய்திகள்

தஞ்சையில் பரவலாக மழை
தஞ்சாவூர், டிச.14- தஞ்சை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி, தொடர்ந்து பரவலாக கன மழை பெய்து வருகிறது. மழை காரணமாக நெல் பயிரில் ஆனைக்கொம்பன் நோய் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. சனிக் கிழமை காலை 7 மணி வரை மாவட்டத்தில் 429.80 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பாபநாசத் தில் 47 மி.மீ, குறைந்தபட்ச மாக ஈச்சன்விடுதியில் 2 மி.மீ மழையளவு பதிவாகி யுள்ளது.  மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் வரு மாறு, தஞ்சாவூர் 23, வல்லம் 13, குருங்குளம் 12, திருவை யாறு 29, பூதலூர் 10.80, திருக் காட்டுப்பள்ளி 10.80, கல்ல ணை 15.30, ஒரத்தநாடு 10.40, நெய்வாசல் தென்பாதி 19.80, வெட்டிக்காடு 19, கும்பகோணம் 27.40, பாபநா சம் 47, அய்யம்பேட்டை 38, திருவிடைமருதூர் 34.40, மஞ்சளாறு 45, அணைக்கரை 13, பட்டுக்கோட்டை 7.60, அதிராம்பட்டினம் 16.10, ஈச்சன்விடுதி 2, மதுக்கூர் 20.20, பேராவூரணி 16 என மொத்தம் 429.80 மி.மீ என மழையளவு பதிவானது.

சாலைப் பணியாளர் சங்கப் பேரவை
அரியலூர், டிச.14- தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்க அரியலூர் மாவட்ட பேர வை கூட்டம் மாவட்டத் தலை வர் பெ.காமராஜ் தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் என்.உதயசூரியன் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் எ.சுப்பிரமணியன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.  மாநில துணைத் தலைவர் பா.கோதண்டபாணி, மாவட்டச் செயலாளர் ம.சிவக் குமார், மாவட்ட பொருளா ளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாநில இணை செயலாளர் ச.மகேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் என். ரத்தினம், மாவட்ட துணை தலைவர் வி.ஞானசம்பந்தம், மாநில பொதுச்செயலாளர் ஆ.அம்சராஜ், அரசு ஊழி யர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஜி.பஞ்சாபிகேசன் மாவட்ட செயலாளர் எம்.கே. முத்து, மாவட்ட துணை தலை வர் என்.வி.வேல்முருகன், கிராம நிர்வாக ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நெடுஞ் சாலை துறை ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் டி.ஆசைதம்பி நிறைவாக நன்றி கூறினார்.

கண்ணாடி கடையில் தீ விபத்து
கரூர், டிச.14- கரூர் பேருந்து நிலையம் அருகே மேற்கு பிரதட்சி ணம் ரோட்டில் உள்ள கடை வீதியில் முதல் மாடியில் இருந்த கண்ணாடி கடையில் திடீரென தீ விபத்து ஏற் பட்டது. தகவலறிந்து தீய ணைப்பு படை வீரர்கள் 2 தீயணைப்பு வண்டிகளில் வந்து தீயை அணைத்தனர்.  கண்ணாடி கடையில் உள்ள பிரேம் செய்வதற்கு வைக்கப்பட்டிருந்த மரச் சாமான்கள் மற்றும் சோபா, மேஜை, நாற்காலிகள் ஆகி யவை எரிந்து தீயில் சேதமா யின. இதன் மதிப்பு சுமார் 3 லட்சம் இருக்குமென கூறப் படுகிறது. மின் கசிவு காரண மாக விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.