தஞ்சாவூர், செப்.4- எல்ஐசியில் பாலிசி மற்றும் பிரீ மிய வருவாயில் தென்மண்டல அள வில், தஞ்சை கோட்டம் முதலிடத்தில் உள்ளது என முதுநிலைக் கோட்ட மேலாளர் கே.வெங்கட்ராமன் தெரி வித்தார். எல்ஐசி நிறுவனத்தின் 64 ஆம் ஆண்டு இன்சூரன்ஸ் வாரவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி தஞ்சாவூர் எல்ஐசி கோட்ட அலுவலகத்தில் செய்தியா ளர்களைச் சந்தித்த முதுநிலை கோட்ட மேலாளர் கே. வெங்கட் ராமன் தெரிவித்ததாவது: “எல்ஐசி தஞ்சை கோட்டம் நடப்பு நிதியாண்டில் 2.46 லட்சம் பாலிசிகள் மற்றும் 526 கோடி முதல் வருட பிரீமிய வருவாயை லட்சிய மாக கொண்டு செயல்பட்டு வரு கிறது. 27 கிளை அலுவலகங்கள் மற்றும் 26 துணை கிளை அலுவல கங்கள் உள்ள, தஞ்சை கோட்டத்தில் நடப்பு நிதியாண்டில் ஆகஸ்ட் 31 வரை 65 ஆயிரத்து 775 பாலிசிகளை ரூ186. 86 கோடிக்கு விற்பனை செய்து மொத்த பாலிசிகள் மற்றும் தவணை முறை பிரீமிய வருவாய் அடிப்படையில் தென்மண்டலத்தில் முதலிடத்தில் உள்ளது. மேலும் நடப்பு நிதி ஆண்டில் ஆக.31 வரை 62 ஆயிரத்து 250 முதிர்வு மற்றும் வாழ்வு கால பயன் உரிமங்களை 354.20 கோடி களுக்கும், 3388 இறப்பு உரிமங்களை ரூ 45.18 கோடிகளுக்கும் தஞ்சை கோட்டம் பட்டுவாடா செய்து பாலிசிதாரர் சேவையில் சிறப்பிடம் பெற்றுள்ளது. இந்தாண்டு கடந்த ஜூலை 31 வரை 39 ஆயிரத்து 756 காலாவதி யான பாலிசிகள் ரூ 38.79 கோடிக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. தஞ்சை கோட்டத்தில் 4 லட்சத்து 41 ஆயி ரத்து 220 பாலிசிகளின் கீழ் ரூ 173.57 கோடிகள் கடன் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பான சேவை வழங்குவதற்காக இதுவரை 17 லட்சத்து 50 ஆயிரத்து 236 பாலிசி தாரர்களின் மொபைல் எண் சேக ரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள் ளது. நேரடி மட்டும் ஆன்லைன் வணி கம் மூலம் எமது கோட்டத்தில் இந்த நிதியாண்டில் 174 பாலிசிகள் விற்கப் பட்டு ரூ 5.41 கோடிகள் முதல் பிரீ மியத் தொகையாக பெறப்பட்டுள்ளது. பென்ஷன் மற்றும் குழு காப் பீட்டு துறை சென்ற நிதியாண்டில் 498 திட்டங்களை 2 லட்சத்து 39 ஆயி ரத்து 474 பேருக்கு வழங்கி ரூ 85.57 கோடிகளை முதல் பிரீமிய வரு வாயாக பெற்று, குறைந்த வரு மானம் ஈட்டுவோருக்கு காப்பீடு வழங்கி சாதனை படைத்துள்ளது. சென்ற நிதியாண்டில் மொத்தம் 1,303 பேருக்கு ரூ 24.52 கோடி இறப்பு காப்பீட்டு தொகையாக இப்பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் 159 திட்டங் களை மொத்தம் 1,63,543 பேருக்கு வழங்கி 23.24 கோடி முதல் பிரீமிய வருவாயை ஈட்டியுள்ளது. மேலும் இறப்பு உரிமத்தொகையாக இப்பிரிவின் மூலம் கடந்த நிதி யாண்டில் 577 பேருக்கு ரூ 12.13 கோடிகள் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. பிரீமியத்தில் 74 சதவீதத்துடன், 71 சதவீத வாடிக்கையாளர்களை எல்ஐசி பெற்றுள்ளது” என்றார். அப்போது வணிக மேலாளர் ராம்குமார், விற்பனை மேலாளர் நேரு, பாலிசி சேவை பிரிவு மேலா ளர் மகேந்திரவர்மன், உரிமம் மேலா ளர் விமலா, குழுக்காப்பீட்டு மேலா ளர் தங்கசாமி மற்றும் பலர் உடனி ருந்தனர்.