tamilnadu

img

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சீர்கேடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் அக்.21- தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சீர்கேடுகளைக் கண்டித்து, மருத்துவக்கல்லூரி நுழைவாயில் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  “தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் உள் நோயாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை தனியார் மருந்தகங்க ளில் வாங்க நிர்ப்பந்திக்க கூடாது. பணி நேரத்தில் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகளில் சென்று பணிபுரிவதை தடுக்க வேண்டும்.  மருத்துவக் கல்லூரிக்கு உயர் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை, தங்கள் லாபத்திற்காக தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முழு உடல் பரி சோதனை நிலையத்தை உடன் திறந்திட வேண்டும் உள்ளிட்டவை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு எம்.கோஸ்கனி தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அருளரசன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்த சாமி, சிபிஎம் மாநகரச் செயலாளர் என்.குருசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாநகரக் குழு உறுப்பினர்கள் ஹெச்.அப்துல் நசீர்,  சாந்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.