tamilnadu

img

“தமிழும் இணையமும்” நிகழ்ச்சி

தஞ்சாவூர், நவ.9- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக் கிழமை அன்று நடைபெற்றது. இதில், “தமிழும் இணையமும்” என்ற தலைப்பில் முனைவர் துரை.மணிகண்டன் பேசினார். தொடர்ந்து தமிழ்  இணைய தளங்கள், வலைப்பூக்கள், தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத, திருத்தம் மேற்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி க்கு முன்னாள் துறைத்தலைவர் முனைவர் இராம. சுந்தரம் தலைமை வகித்தார். துறைத் தலைவர் சி.தியாகராஜன் வரவேற்றார். முனைவர் பட்ட ஆய்வாளர் ரமணி நன்றி கூறினார். ஆய்வாளர் பார்வதி தொகுத்து வழங்கினார்.