தஞ்சாவூர், ஜூன் 29- தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறை அடுத்த பொன்னாவரையைச் சேர்ந்தவர் சுபாஷினி(30). இவருக்கு இரு குழந்தை கள் உள்ளனர். இவர் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணி யாற்றி வந்தார். அப்போது மாற்றுப் பணி யாக திருவையாறு டிஎஸ்பி அலுவல கத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சுபாஷினியை கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்துக்கு இடமாறுதல் செய்தனர். இதையடுத்து இவர் தினமும் கும்பகோணத்துக்கு பணிக்கு சென்று வந்தார். இதற்கிடையில் வெள்ளிக்கிழமை மாலை திருவையாறிலிருந்து கும்ப கோணம் செல்லும் வழியில் உமையாள் புரத்தில் மயங்கிய நிலையில் சுபாஷினி சாலையோரம் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் விஷம் அருந்தி இருப்பதாக கூறப் பட்டதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் காவல்துறை விசாரணையில், திருவையாறில் சுபாஷினி பணியாற்றிய போது அங்கு மணல் கடத்தி வந்த வேன் ஒன்றை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஆனால் அந்த வேன், காவல் துறை உயர் அதிகாரிகளின் தலையீட்டால் உடனடியாக விடுவிக்கப்பட்டது. அதே நேரத்தில் சுபாஷினியை கும்பகோணத் துக்கு உடனடியாக பணிமாற்றம் செய்யப் பட்டது. நேர்மையாக பணியாற்றியமைக்கு கிடைத்த பரிசா என சுபாஷினி மனமுடைந்து புலம்பி வந்த நிலையில் அவர் பணிக்கு செல்லும் வழியில் விஷம் குடித்துள்ளதாக வும், அதே நேரத்தில் சுபாஷினிக்கும் திரு வையாறு துணை வட்டாட்சியருக்கும் நிலப் பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட மனஉளைச் சலில் விஷம் குடித்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.