தஞ்சாவூர் டிச.4- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், திருச்சி காவேரி மகளிர் கல்லூ ரியில் கிழக்கு மண்டல அளவிலான துளிர் ஜந்தர் மந்தர் அறிவியல் வினாடி வினா போட்டி நடைபெற்றது. கிழக்கு மண்டலம் திருச்சி, தஞ்சாவூர், புதுக் கோட்டை, பெரம்பலூர் - அரியலூர், திரு வாரூர் மற்றும் நாகை மாவட்டங்களை உள்ளடக்கியது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 10 குழுக்களைச் சார்ந்த 30 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இதில் தஞ்சையை சேர்ந்த திரு மகள் மேல்நிலைப் பள்ளியின் கமலா வழிகாட்டி ஆசிரியராக செயல்பட்ட, மதுமிருதுளா, எழிலரசன், புருஷோத்த மன் ஆகிய மாணவர்களை கொண்ட குழுவினரும், தஞ்சை மகரிஷி வித்யா மந்திர் பள்ளியை சார்ந்த ஆசிரியை நீலா வழிகாட்டியாக செயல்பட்ட மாண வர்கள் தருண், ஹரிணி, தருண்முருகன் ஆகியோரைக் கொண்ட குழுவினரும் வரும் டிச.7 அன்று செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரம் தனலெட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கு பெற உள்ளனர். திருச்சி மாவட்ட துணைத்தலை வர் சாந்தி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் முனைவர் வெ.சுகு மாரன், மாநிலச் செயலாளர் ஸ்டீபன்நா தன், தஞ்சை மாவட்டச் செயலாளர் லெ.முருகன், ஆகியோர் சிறப்புரை யாற்றினர். திருச்சி மாநகர வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயலட்சுமி வாழ்த்திப் பேசினார். திருச்சி மாவட்டச் செயலாளர் மணிகண்டன், தலைவர் அசோக் கலந்து கொண்டனர். கல்லூரி யின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கி ணைப்பாளர் சாத்தம்மைப் பிரியா நிக ழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.