தஞ்சாவூர், அக்.20- கடலில் இருக்கும் மீன்குஞ்சு கள், முட்டைகள், மீன் வளத்திற்கு காரணமான மீன்கள் வசிக்கும் பாசி உள்ளிட்ட கடல் செடிகளை அடி யோடு அரித்துக் கொண்டு வரும், மீன்வளத்தை பாதிக்கும் இரட்டை மடி வலை, சுருக்கு மடி வலை, தங்குரூசி வலை, பாசி வலை ஆகி யவற்றை பயன்படுத்தி மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இதை யும் மீறி, கடலோரக் காவல்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் கண் ணில் மண்ணைத் தூவி, அதிகம் மீன்பிடித்து, கூடுதல் லாபம் பார்க்க லாம் என சில மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன் படுத்தி வருகின்றனர். இதனை தடுப்பதற்காக மீன் வளத்துறை அலுவலர்கள் முன்ன றிவிப்பு இன்றி அடிக்கடி கடலுக்குள் சோதனைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சனிக்கிழமை மீன் வளத்துறை உதவி இயக்குனர் சிவகுமார். மீன்வளத்துறை ஆய் வாளர் கெங்கேஸ்வரி ஆகியோர் உத்தரவின் பேரில், மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் காமராஜ், மீன் வள மேற்பார்வையாளர்கள் சுரேஷ், சண்முகசுந்தரம் ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த னர். அப்போது மல்லிப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 4 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் விசைப்படகு மீனவர்கள் இரட்டை மடிவலை பயன்படுத்தி மீன் பிடித்தது தெரிய வந்தது. மீன்வளதுறையினர் அருகில் சென்றதும் விசைப்படகு மீனவர்கள் மீன் வலையை விட்டு விட்டு தப்பி ஓடினர். பின்னர் விசைப் படகு மீனவர்கள் விட்டுச் சென்ற இரட்டைமடி வலையை மீன்வளத் துறை அலுவலர்கள் கைப்பற்றி மல்லிப்பட்டினம் துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்த மீனவர்கள் யார் என்று தெரியவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட வலை யில் இருந்த அனைத்தும் மீன் குஞ்சு களாகவே இருந்தன. துறைமுகத் தில் இருந்த மீன் குஞ்சுகளை மீன வர்கள், பொதுமக்கள் கண்ணீரு டன் பார்த்து நின்றனர். மேலும் மீன் குஞ்சுகளை அதிகாரிகள் ஏலத்திற்கு விட்டனர். சேதுபாவாசத்திரம், மல்லிப் பட்டினம், கள்ளிவயல்தோட்டம் பகுதிகளில் மீனவர்கள் இரட்டை மடி வலையை பயன்படுத்தக் கூடாது. கடல் மீன் வளத்தை அழிக்கும் இரட்டை மடி, சுருக்கு மடியில் மீன வர்கள் மீன்பிடிப்பதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இத னைக் கண்டித்து இப்பகுதி மீன வர்கள் பல போராட்டங்கள் நடத்தி யும் பலனில்லை. மற்ற மீனவர்கள் இதுபோன்ற செயலை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு மீனவர் பேரவையின் மாநில பொதுச் செய லாளர் தாஜூதீன், நாட்டுப்படகு மீன வர் சங்க தலைவர் சந்திரசேகர் தெரி வித்தனர்.