tamilnadu

img

அதிராம்பட்டினம் சாலையை சீரமைக்க கோரிக்கை 

தஞ்சாவூர், மே 30-தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச்சங்கத்தலைவர் ஹாஜி எம்.எஸ் ஷிகாப்தீன் தலைமையில் செயலாளர் ஹாஜி ஏ.அப்துல் ரெஜாக் உள்ளிட்டோர் அதிராம்பட்டினம் பேரூர் செயல் அலுவலர் எல்.ரமேஷிடம் அளித்த மனுவில், பட்டுக்கோட்டை- திருவாரூர் அகல ரயில் ரயில் பாதைஅமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, வரும் ஜூன் 1 முதல் திருவாரூர்- பட்டுக்கோட்டை- காரைக்குடி வழித் தடத்தில் பயணிகள் ரயில் சேவை தொடங்க உள்ளது.இந்நிலையில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு போடப்பட்டஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் செல்லும் சாலை சீரமைக்காமல் மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே கழிவு நீர், மழை நீர் குடியிருப்பு பகுதிகளில்தேங்காதவாறும், சீராகச் செல்லும் வகையிலும், புதிதாககாங்கிரீட் கூடிய மழை நீர் வடிகால் அமைக்க நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

;