tamilnadu

சாலைகளை சீரமைக்க கோரிக்கை

கும்பகோணம், செப்.29-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஆட்டோ கட்சிக் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை உறுப்பினர் கணேசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் பி.பார்த்தசாரதி நகர செயலாளர் செந்தில்குமார் கிளை செயலாளர் சங்கர் ஜெயக்குமார் பன்னீர்செல்வம் ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கும்பகோணம் முழுவதும் பாதாள சாக்கடை பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டு சீரமைக்கப்படாமல் சீர்குலைந்து குண்டும் குழியுமாக வாகனங்களை ஓட்டுவதற்கு லாயக்கற்ற வகையில் உள்ளது. அதை உடனடியாக சீர் செய்திட வேண்டும். மாடுகள் சாலைகளில் முக்கிய கடைத்தெரு பகுதிகளிலும் போக்குவரத்துக்கு இடையூறாக எந்த நேரமும் திரிந்து கொண்டு பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. மாடுகளை சாலைகளில் திரிவதை தடுத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.