tamilnadu

img

பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரிக்கை

தஞ்சாவூர் நவ.5- தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், விவ சாயிகள் பயிர் காப்பீடு செய்த 2018-19 ஆம் ஆண்டிற்கான இழப்பீட்டு தொகையை அனைத்து விவசாயிகளுக்கும் கடனில் வரவு வைக்காமல் வழங்க வேண்டும். கோவில் பத்து விவசாயிகளுக்கு விடுபட்டுள்ள பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.  பெரிய விவசாயிகளுக்கு வழக்கு நீதி மன்றத்தில் இருக்கும்போது, அவர்கள் பணத்தை கடனில் வரவு வைப்போம் எனக் கூறும் பூதலூர் கூட்டுறவு வங்கி கண்டித்தும்,  செவ்வாய்க்கிழமை அன்று தஞ்சை மாவட்டம் பூதலூர் நான்கு ரோட்டில் சாலை மறியல் போராட்டம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், பூதலூர் ஒன்றியத் தலைவர் பி.தட்சிணா மூர்த்தி ஆகியோர் தலைமையில் நடை பெறும் என என தமிழ்நாடு  விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் தொழிலா ளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம்  பூதலூர் தெற்கு ஒன்றித்தின் சார்பில் அறிவிக்கப்பட்டி ருந்தது.  இந்நிலையில் திங்கள்கிழமை அன்று பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டா ட்சியர் சிவகுமார் தலைமையில் பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அரசு அலுவலர்கள் சார்பாக கூட்டுறவு சார்பதி வாளர் (களஅலுவலர்) மல்லிகா, பூதலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலை வர் மாரி அய்யா, வேளாண்மை அலுவலர் எஸ்.நிவேதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  விவசாயிகள் சார்பில் தமிழ்நாடு விவ சாயிகள் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றி யச் செயலாளர் சி.பாஸ்கர், நிர்வாகிகள் கே. ராஜகோபால், சுந்தரவடிவேல், பாலசுப்பிர மணியன், கலியமூர்த்தி, முத்து கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், 2018-19 க்கான பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகையை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்குவதாகவும், கோவில்பத்து கிராம விவசாயிகளுக்கு விடுபட்டுள்ள பயிர் காப்பீட்டு தொகையை வழங்க 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்,  பயிர் இன்சூரன்ஸ் வழங்கிட, விடுபட்ட விவசாயிகளின் பட்டியல் குறித்து ஆய்வு செய்து தகவல் அளித்திடவும், பெரு விவசாயி களுக்கு பிடித்தம் இல்லாமல் பயிர் இன் சூரன்ஸ் வழங்கப்படும் எனவும், பூதலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் மற்றும் வேளாண்மை அலுவலர், வேளாண்மை துணை அலுவலர் சார்பாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. கோரிக்கைகளை நிறைவேற்றித் தர அதிகாரிகள் எழுத்துப்பூர்வ மாக ஒப்புக் கொண்டதால், நடைபெற இருந்த சாலை மறியல் தற்காலிகமாக கைவிடப் பட்டது.