tamilnadu

img

ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி செயலாளர் வேண்டுகோள்

 கும்பகோணம், டிச.3-  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பேரூ ராட்சிக்குட்பட்ட நாகநாதசுவாமி திருக் கோயில் (ராகு ஸ்தலம்) கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா டிசம்பர் 5-ஆம் தேதி  முதல் 16 வரை நடைபெற உள்ளது.  தேரோட்டம் மற்றும் பல்லாக்கு உற்சவ விழா நடைபெற உள்ளதால் திருநா கேஸ்வரம் கடை வீதி, வடக்குவீதி, மேலவீதி, தெற்கு வீதி, செட்டித் தெரு உள்ளிட்ட தேரோடும் நான்கு வீதிகளின் உள்ள சாலைகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் ஏதேனும் மேற்கொள்ளப்பட்டு இருப்பின் உடனடியாக தாமாகவே முன்வந்து அகற்ற வேண்டுமென பொதுமக்களுக்கு திருநாகேஸ்வரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.சிவ லிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.