tamilnadu

img

மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறுக! தஞ்சாவூரில் சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூலை 24-  மோட்டார் வாகனச் சட்டத்திருத்த வரைவு மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடியில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு ஆட்டோ சங்க மாநகரத் தலைவர் எஸ். ஷாநவாஸ் தலைமை வகித்தார். சிஐ டியு மாவட்டச் செயலர் சி.ஜெயபால் சிறப்புரையாற்றினார்.  சிஐடியு மாவட்ட துணைச் செயலர் கே.அன்பு, சா. செங்குட்டுவன், சுமைப் பணி தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் த.முருகேசன், கட்டுமானத் தொழிலாளர் மாவட்டச் செயலாளர் இ.டி.எஸ். மூர்த்தி, முறைசாரா தொழி லாளர் மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மோட்டார் வாகனச் சட்டத்திருத்த வரைவை திரும்பப் பெற வேண்டும். மோட்டார் தொழிலை கார்ப்பரேட்டு களுக்கு தாரை வார்க்கக்கூடாது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். வாகனக் காப்பீட்டுக் கட்டண உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். நலவாரிய பணப்பயன்களை முடக காமல் விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

;