தஞ்சாவூர், பிப்.17- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி யில் ஜமாஅத் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து கட்சியினர், அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு கலந்து கொண்ட பேரணி- கண்டனப் பொதுக்கூட்டம் நடை பெற்றது. வேதாந்தம் திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு முன்னாள் பேரூராட்சி தலைவர் என்.அசோக்குமார் தலைமை வகித்தார். ஜமாஅத் செயலாளர் ஹெச். சம்சுதீன் வரவேற்றார். ஜமாஅத் தலை வர் கே.ஏ.அப்துல் முத்தலிப், முன்னிலை வகித்தார். திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே.மகேந்திரன், தமிழக மக்கள் புரட்சிக் கழக தலைவர் அரங்க.குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.வாசு, ஆர்.கலைச்செல்வி, வழக்கறிஞர் வி. கருப்பையா, ஒன்றியச் செயலாளர் கள் ஏ.வி.குமாரசாமி, ஆர்.எஸ்.வேலுச் சாமி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரா. திருஞானம், பா.பாலசுந்தரம், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் வை.சிதம்ப ரம், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஆர். சிங்காரம், கே.வி.கிருஷ்ணன், சேக் இப்ராம்ஷா, திமுக முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் தனம் கோ.நீல கண்டன், அப்துல் மஜீத், டாக்டர் சந்திர சேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மோட்ச.குணவழகன், மதிமுக குமார், வி.பாலசுப்பிரமணி யன், ரவிச்சந்திரன், அமமுக ஒன்றியச் செயலாளர் ஆசைத்தம்பி, நகரச் செய லாளர் பாண்டியராஜன், நாம் தமிழர் கட்சி திலீபன், தமிழக மக்கள் புரட்சி கழகம் ஆறு.நீலகண்டன், மனித நேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் ச.அப்துல் சலாம், திராவிடர் விடுதலைக் கழகம் சித.திருவேங்கடம், கு.பாரி, அறநெறி மக்கள் கட்சி த.ஜேம்ஸ், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறை வாக ஜமாஅத் பொருளாளர் கே.கான் முகமது நன்றி கூறினார். முன்னதாக, 200 மீ நீள தேசியக் கொடியை ஏந்திய இளைஞர்கள் பயணி யர் மாளிகையில் பேரணியாகப் புறப் பட்டனர். பேரணி- பொதுக்கூட்டத்தில் 1,000 பெண்கள் உள்பட 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.