தஞ்சாவூர், ஆக.5- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி வளாகத்தில், வேளாண் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கம் சார்பில், அரசு கொப்பரைக் கொள் முதல் நிலைய திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் கார்த்திகேயன், திருச்சிற்றம்பலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான எஸ்.வி.திருஞானசம்பந்தம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன் வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர்கள் பேரா வூரணி மா.கோவிந்தராசு, பட்டுக்கோட்டை சி.வி.சேகர் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மண்டல இணைப் பதிவாளர் மொ.ஏகாம்பரம் தலைமை வகித்துப் பேசினார். கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உ.துரைமாணிக்கம், சுபா. ராஜேந்திரன், சரக துணைப் பதிவாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டுறவு சங்கச் செயலாளர் ஆர்.தெட்சிணா மூர்த்தி நன்றி கூறினார். பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு ஆகிய மூன்று இடங்களில் கொப்பரை கொள்முதல் நிலையம் திறக்கப் பட்டுள்ளது. இந்த கொப்பரை மையம் 6 மாத காலத்திற்கு செயல்படும். பந்து கொப்பரை அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.99.20 வீதமும், அரவைக் கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.95.21 வீத மும் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.