tamilnadu

img

காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் - கைது

தஞ்சாவூர், செப்.23- தஞ்சாவூர் மாவட்டம் அம்மா பேட்டை ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புளியகுடி கிளைச் செயலாளரும் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் ஒன்றிய துணைச் செய லாளருமான எஸ். சத்தியமூர்த்தியை, சிலரின் தூண்டுதலின்பேரில் சட்டத் திற்கு புறம்பாக ரவுடி பட்டியலில் சேர்த்தது அம்மாபேட்டை காவல் துறை. அந்த அடாவடித்தனத்தை கண் டித்தும் உடனடியாக ரவுடி பட்டியலில் இருந்து நீக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அம்மாபேட்டை ஒன் றியக்குழு சார்பில் திங்களன்று அம்மா பேட்டை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றியச் செய லாளர் ஏ.நம்பிராஜன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் கோ.நீல மேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.மனோகரன், வெ.ஜீவ குமார், கே.பக்கிரிசாமி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலை வர் பி.செந்தில்குமார், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.முனியாண்டி, வி.மயில்வாகனன், ஏ.செல்வராஜ், வி.தங்கையன், வி.ரவி, கே.கோபாலன் மற்றும் ராஜேந்திரன், ஆர்.பொன்னுசாமி, எஸ்.சிவலிங்கம், டி.குமார், எஸ்.தீபன்ராஜ் உள்ளிட்ட கிளைச் செயலாளர்கள், மற்றும் 300க்கும் மேற்பட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதையடுத்து, காவல்துறையினர் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தி யதாக 30 பெண்கள் உள்ளிட்ட 100 பேரை கைது செய்தனர்.

;