தஞ்சாவூர் டிச.7- தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இசைத்துறையின் சார்பாக ஆபிரகாம் பண்டி தர் அறக்கட்டளை, தென்னாப் பிரிக்கா ரெங்கசாமி பிள்ளை அறக்கட்டளை மற்றும் பாரதி வித்யாலயா அறக்கட்ட ளைச் சொற்பொழிவுகள் மற்றும் இசைப்போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவை யாறு அரசர் கல்லூரி முன் னாள் முதல்வர் முனைவர் செல்வகணபதி தலைமை வகித்தார். உதவிப் பேராசி ரியர் முனைவர் செ.கற்பகம் வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் அண் ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் முனைவர் ஆர்.கே.குமார், திருச்சி சீதாலட்சுமி இராம சுவாமி கல்லூரி இசைத் துறை தலைவர் முனைவர் செ.லலிதாம்பாள், தஞ்சா வூர் மிருதங்க வித்வான் இரா.செந்தில்குமார் ஆகி யோர் உரையாற்றினர். இசைப் போட்டியில் தஞ் சாவூர் மகரிஷி வித்யாமந்திர் பள்ளியின் மாணவி எ.பிரகதி முதல் பரிசும், ரேடியன்ட் இன்டர்நேசனல் பள்ளி ஏ.என்.அபிராத் இரண்டாம் பரிசும், டான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பி.ஸ்ரீதரன் மூன்றாம் பரிசும், திருநாகேஸ்வரம் அரசு மேல் நிலைப்பள்ளி என்.காவியா சிறப்புப் பரிசும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்ப் பல் கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கோ.பால சுப்பிரமணியன் பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசி னார். நிறைவாக உதவிப் பேராசிரியர் முனைவர் இரா. மாதவி நன்றி கூறினார்.