தஞ்சாவூர், ஆக.13- நாகை மாவட்டம் மயிலாடு துறை வட்டத்தில் திருமணஞ்சேரி அருகே திருமங்கலம் எனும் கிரா மம் உள்ளது. அவ்வூரில் விக்கிரம சோழன்(கி.பி.1118– 1136) எடுப்பித்த சிவன் கோயில் ஒன்று உள்ளது. சித லமடைந்த அக்கோயிலைப் புதுப்பித்து அண்மையில் கும்பா பிஷேகம் செய்துள்ளனர். அப் போது அக்கோயில் வளாகத்தினுள் புதைந்து கிடந்த ஒரு கல்வெட் டினை முன்னாள் வங்கி அதிகாரி யான வேலூரைச் சார்ந்த கல்யா ணராமன் என்பவரும், ஊர் மக்க ளும் எடுத்து திருப்பணி செய்யப் பெற்ற அக்கோயிலின் மகா மண்ட பத்தின் வடபுறம் தரையில் நட்டு எதிர்காலத்தில் அழிவுபடாதவாறு காப்பாற்றி வைத்தனர். அக்கல்வெட்டினைப் படி யெடுத்து ஆய்வு மேற்கொண்ட குட வாயில் பாலசுப்ரமணியன் கூறுகை யில், “பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தமிழ்நாட்டில் இருந்த ஜாதியினர் எல்லாம் தங் களை இடங்கை, வலங்கை எனப் பிரித்துக் கொண்டனர். இம்முறை சோழர், பாண்டியர், விஜயநகரர், நாயக்கர் போன்ற அரசர்கள் காலத்தில் தொடர்ந்து கி.பி.1900 வரை இருந்துள்ளது. இதனால் இரு பிரிவினரிடையே உரிமைகள் பற்றியும், உயர்வு தாழ்வு பற்றியும் அடிக்கடி பூசல் களும் மோதல்களும் நிகழ்ந்துள் ளன. இவற்றை பிற்கால கல்வெட்டு களும் செப்பேடுகளும் எடுத்துக் கூறுகின்றன. ஒரு காலக் கட்டத்தில் இடங்கை பிரிவில் 98 ஜாதிகளும், வலங்கை பிரிவில் 98 ஜாதிகளும் இருந்தன. மிகவும் பிற்காலத்தில் இடங்கை ஜாதிகள் 6 ஆகவும் வலங்கைப் பிரிவில் 30 ஜாதிகளும் இருந்தன. ஆனால் திருமங்கலத்தில் உள்ள கல்வெட்டோ கோச்சடைய வர்மன் திரிபுவன சக்ரவர்த்தி சுந்த ரபாண்டிய தேவரின் பதினாலாம் ஆட்சியாண்டில்(13-ஆம் நூற் றாண்டில்) சித்திரை மாதத்தில் ஒரு நாள் விருதராஜ பயங்கர வள நாட்டைச் சார்ந்த குறுக்கை நாடு, காளி நாடு, விளத்தூர் நாடு, மாந் துறை நாடு, திருமங்கலநாடு எனப் பெறும் இந்த ஐந்து நாட்டு இடங்கை வலங்கைப் பிரிவினராகிய ஜாதி யினர் எல்லாம் திருமங்கலம் கோயி லில் கூடி இனி சந்திரன் சூரியன் உள்ள அளவும் தங்களுக்குள் இடங்கை வலங்கைப் பிரிவு களை மேற்கொள்ள மாட்டோம் என்றும், யாரேனும் கொண்டாடு வார்களாயின் அவர்கள் ஐந்து நாட்டிற்கும் அநியாயம் செய்த வர்களாகக் கருதப்படுவர் என்றும் முடிவு எடுத்து அம்முடிவினை அரசனின் ஆணைப் பெற்று இங்கு கல்வெட்டாகப் பொறித்துள்ளனர். சோழர்களின் ஆட்சி முடிவு பெற்ற பின்பு சோழநாடு பாண்டி யர் வசம் இருந்தது. அப்போது இக்கல்வெட்டு பொறிக்கப் பெற்றதாகும். ஜாதி மோதல்களைத் தவிர்க்க கோயிலில் வைக்கப் பெற்ற இக்கல்வெட்டு வரலாற்றுச் சிறப்புடைய ஒன்றாகும் என குட வாயில் பாலசுப்ரமணியன் கூறி னார்.