tamilnadu

img

தாழ்வாகச் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளால் மக்கள் அச்சம்

தஞ்சாவூர், மே 16- தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் பீரங்கி மேடு பகுதியில், ஆரம்ப காலத்தில் நிறுவப்பட்ட ஒரு மின் தடை திறப்பான் உள்ளது. இந்த திறப்பானில் இருந்து உயர் அழுத்த மின்சாரம், பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.    இந்த மின் தடை திறப்பானில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து உபகர ணங்களும் தற்சமயம் மிகவும் சேத மடைந்த நிலையில் காணப்படுகிறது, மேலும், இதிலிருந்து மற்ற இடங்க ளுக்கு செல்லும் உயர் அழுத்தமின் கம்பி கள் மிகவும் தாழ்வாக செல்கிறது. குறிப்பாக, இதன் அருகில் பள்ளியும் குடி யிருப்புகளும் அமைந்துள்ளன.  பொதுமக்களும் மாணவர்களும் அதிகம் பயன்படுத்தும் இந்த பகுதி யில் செல்வோர், அனைவரும் அச்சத்து டன் கடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே, இனியும் தாமதிக்காமல், சேதம டைந்துள்ள மின் தடை திறப்பானையும், தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளையும் உடனடியாக சீர மைத்து தர வேண்டுமென பொது மக்கள் சம்பந்தப்பட்ட மின் வாரிய  அதிகாரி களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.