tamilnadu

தஞ்சை கல்லணைக் கரையில் பனை விதைகள் விதைக்கும் பணி

தஞ்சாவூர், செப்.22-  தஞ்சை அருகே உள்ள பழைய கல்விராயன் பேட்டையில் உள்ள கல்லணைக் கால்வாயில் கடந்த ஆண்டு உடைப்பு ஏற்பட்டு  ஆற்று நீர் வீணாகியது. இதையடுத்து கல்லணைக் கால்வாய் கரைகளை பாதுகாக்கும் நோக்கில், அந்த பகுதிகளில் பனை விதைகள் விதைக்க கள்ளப்பெரம்பூர் செங்கழுநீர் ஏரி பாதுகாப்பு குழு திட்டமிட்டது.  இதைத்தொடர்ந்து தஞ்சை அருகே உள்ள வண்ணாரப்பேட்டை கிராமத்திலிருந்து, பூதலூர் வரை10 கி.மீ. தொலைவிற்கு 10,000 பனை விதைகள் விதைக்கும் பணி சனிக்கிழமை துவங்கியது. இதில், கள்ளப் பெரம்பூர் கிராமத்தினர், மரம் காக்கும் கரங்கள், ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள், நம்பிக்கை விழுதுகள் அமைப்பினர், ரோட்டரி சங்கம், மக்கள் பாதை அமைப்பு, பாரத் கலை அறிவியல் கல்லூரி, சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, முதல் நாளன்று, 6 கி.மீ., தூரத்திற்கு 4,500க்கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டனர். இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை 5,500 பனை விதைகளை நட்டனர்.