தஞ்சாவூர், ஆக.12- தஞ்சாவூர் அருகே 250 ஏக்கர் பரப்ப ளவு கொண்ட ஏரியை தங்களது சொந்த செலவில் தூர்வாரும் கிராமத்தினர். ஊர் பொது இடத்தில் மது குடித்தால் அதற்கு அபராதம் விதிக்கப்பட்டு, அந்த பணத்தையும் ஏரி தூர்வார பயன் படுத்தியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் அமைந்துள்ளது குளமங் கலம் கிராமம். இக்கிராமத்திற்கு மட்டு மல்லாமல் சமையன்குடிக்காடு, ஒக்க நாடு கீழையூர், ஒக்கநாடு மேலையூர், வன்னிப்பட்டு ஆகிய கிராமங்களின் நீர் ஆதாரமாய் விளங்கி வருகிறது சடயான் ஏரி, 250 ஏக்கர் பரப்பளவில், 80 ஏக்கரை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாய நிலமாக மாற்றி பல ஆண்டாக, விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் ஏரியை தூர்வார வேண்டும் என இளைஞர்களும், கிரா மத்தினரும் முடிவு செய்து, குழு அமைந்தனர். பின்னர் ஆக்கிரமிப்பா ளர்களை சந்தித்து பேசினர், இதை தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களை இடத்தை விட்டு கொடுத்தனர். முதற் கட்டமாக வீடுகளுக்கு 2 ஆயிரம் என 10 லட்சம் ரூபாய் வசூல் செய்து கரை களை பலப்படுத்தினர். பின்னர், மது குடித்து விட்டு, ஊர் பொது இடங்களில் ரகளையில் ஈடுபடுவோர்களிடம் இளைஞர்கள் மற்றும் பஞ்சா யத்தாரால் 5 ஆயிரம் ரூபாய் வரை அப ராதம் வசூலிக்கப்பட்டு, அந்த பணமும் ஏரி துார்வாருவதற்கு பயன்படுத்தி யுள்ளனர். இது குறித்து இளைஞர்கள் கூறிய தாவது; ஏரியில் 80 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன. அதை முதலில் அகற்றி விட்டு, ஏரிக்கு ஆற்றிலிருந்து தண்ணீர் வரும் குளமங்கலம் நம்பர் ஒன் வாய்க்காலை தூர்வாரினோம். சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடு வாழ் நண்பர்களிடம் பெற்ற உதவி, கிரா மத்தில் வசூல் என 10 லட்சம் ரூபாய்க் கும் மேல் நிதியை திரட்டி, ஏரியை தூர்வாரி வருகிறோம். இளைஞர்கள் அவர்கள் குடிக்கா மல் இருப்பதற்கும் ஒரே நேரத்தில் மண்ணையும், மனிதனையும் காக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், பொது இடங்களில் மது குடித்தவர்களிடம் 5 ஆயிரம் ரூபாய் வீதம், 80 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூல் செய்யப்பட்டது. இந்த தொகையும் ஏரி தூர்வார பயன் படுத்தியுள்ளோம். இதன்மூலம் கிரா மத்துக்குள் மது குடிப்போரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதற்கு யாரும் உதவ நினைத்தாலும் முன்வந்து உதவலாம்” என்றனர்.