tamilnadu

img

அம்மாபேட்டை அருகே மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய பேரவை

தஞ்சாவூர், ஜூலை 15- அம்மாபேட்டை ஒன்றி யம் கோவிலூர் சமுதாயக் கூடத்தில், தமிழ்நாடு அனை த்துவகை மாற்றுத் திற னாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைக ளுக்கான சங்கத்தின் ஒன்றி யப் பேரவை கூட்டம் நடை பெற்றது.  கூட்டத்திற்கு கே.ரவி தலைமை வகித்தார். சங்க த்தின் மாவட்டச் செயலா ளர் பி.எம்.இளங்கோவன் அமைப்பு குறித்துவிளக்கி யும், புதிய நிர்வாகிகளை அறி முகப்படுத்தியும் பேசினார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவ ட்டச் செயலாளர் கே.பக்கிரி சாமி, மாவட்டத் தலைவர் ஆர்.வாசு, மாதர் சங்க மாவ ட்டத் தலைவர் ஆர்.கலை ச்செல்வி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர்.  விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் கே.முனி யாண்டி, விவசாயத் தொழி லாளர் சங்க ஒன்றியச் செய லாளர் ஏ.செல்வராஜ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.  

கூட்டத்தில் 11 பேர் கொண்ட ஒன்றி யக்குழு தேர்வு செய்யப்ப ட்டது. தலைவராக கே.ரவி, செயலாளராக வி.ரவி, பொருளாளராக சத்யா, துணைத் தலைவர்களாக சபாபதி, திவ்யா, துணைச் செயலாளர்களாக பி.ரவி, ஜான்பீட்டர் ஆகியோரும் மற்றும் மகேஸ்வரி, ரா ஜப்பா, ராஜா, முருகே சன் ஆகியோர் கொண்ட  ஒன்றியக் குழு அமைக்கப்ப ட்டது.  கூட்டத்தில், “ மாற்றுத்தி றனாளிகள் அனைவருக்கும் கொரோனா கால நிவார ணமாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். நூறுநாள் வேலைத்திட்டத்தில் அனைத்து மாற்றுத் திறனா ளிகளுக்கும் பணி வழங்க  வேண்டும்.  4 மணி நேர  வேலையும், ரூ.256 கூலி யும், பணி அடையாள அட்டை யும் வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள நிவாரணப் பணம், விடுபடாமல் அனை வருக்கும் வழங்க வேண்டும். நலவாரியப் பயன்களை மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் வழங்க வேண்டும்” என்பன உள்ளி ட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.