tamilnadu

பட்டுக்கோட்டையில் நகராட்சி தொழிலாளர்கள் சங்க கூட்டம்

தஞ்சாவூர், ஜூலை 12–  தஞ்சையில் கரும்பு வெட்டும் பணிக்காக வந்த இடத்தில், 13 வயது சிறுமிக்கு திண்பண்டங்கள் வாங்கி  கொடுத்து, பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்ப மாக்கிய தொழிலாளியை, காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைந்த னர். கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தெரசா புரத்தைச் சேர்ந்தவர் தேசிகாமணி (45), கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் கடந்த 2018 இல், தஞ்சா வூர் மாவட்டம் தங்கப்ப உடையான்பட்டியில், ஒரு கரும்பு  தோட்டத்தில் கரும்பு வெட்டும் பணிக்காக வந்திருந்தார். அவருடன் வந்த குழுவில், புதுச்சேரி மாநிலத்தை  சேர்ந்த பெண் ஒருவரின், 13 வயது மகளுக்கு தினம்தோறும் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து பழகி வந்துள்ளார். தின்பண்டங்களை வாங்கிக் கொண்ட சிறுமியை மிரட்டி தினமும் பாலியல் பலா த்காரம் செய்து வந்துள்ளார். அதன்பிறகு, 2019 இல்  அச்சிறுமியும் அவரது தாயும் திருவள்ளுர் மாவ ட்டத்தில் மீண்டும் கரும்பு வெட்டும் பணிக்காக சென்று ள்ளனர்.

அங்கும் பணிக்காக சென்ற தேசிகாமணி, அச்சிறுமியை தொடர்ந்து பலமுறை பாலியல் பலா த்காரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், அச்சிறுமி கடந்த ஜனவரி மாதம், அரியலூர் மாவட்டத்தில் தங்கியிருந்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அவருக்கு ஜன வரி 26 அன்று ஆண் குழந்தை பிறந்தது. இதை தொ டர்ந்து சிறுமியும், அவரது தாயாரும் சொந்த ஊருக்கு  சென்று விட்டனர்.  இது தொடர்பாக புதுச்சேரி மாநில காவல்து றையில் புகார் அளித்தனர். இச்சம்பவம் முதலில் நடை பெற்ற பகுதி தஞ்சாவூர் மாவட்ட எல்லைக்குட்பட்டது என்பதால், அப்புகார் வல்லம் மகளிர் காவல்நிலை யத்திற்கு மாற்றப்பட்டு தேசிகாமணி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜனவரியில் இருந்து தலைமறைவாக இருந்த தேசிகாமணியை காவல்து றையினர் தேடி வந்தனர். தேசிகாமணி விழுப்புரம் மாவ ட்டம் சத்திரப்பட்டி கிராமத்தில் அவரது மாமியார் வீட்டில் இருந்தது தெரியவந்தது. அங்கு சென்ற வல்லம் மகளிர் காவல்துறையினர், சனிக்கிழமை தேசிகா மணியை கைது செய்து, தஞ்சாவூர் சிறையில் அடைத்த னர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது 15 வயது என்ப தால் அரசு காப்பகத்தின் பராமரிப்பில் உள்ளார். 

;