tamilnadu

எம்எல்எம் மோசடி - தஞ்சையில் ஒருவர் கைது கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம் : காவல்துறை எச்சரிக்கை

தஞ்சாவூர், பிப்.9- கவர்ச்சிகரமான, கூடுத லான லாபம் தருவதாக போலி யான விளம்பரம் செய்த எம்எல்எம் நிறுவன தஞ்சை  மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இது போன்ற போலியான விள ம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம் என தஞ்சை மாவட்ட காவல்துறை பொது மக்களுக்கு எச்சரிக்கை விடு த்துள்ளது.  இதுகுறித்து மாவட்ட  காவல்துறை வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  “தஞ்சாவூர் மாவ ட்டத்தைச் சேர்ந்த பொது மக்கள் பலருடைய அலை பேசியில் வந்த வாட்ஸ்அப் மெசேஜ்சில், திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ELFIN E-COM PRIVATE LTD  என்ற நிறுவனம், தஞ்சை நகரம் SENGO HALL அரங்கில் நிகழ்ச்சி நடைபெ றும் எனவும், அதில் அதிக ளவில் கலந்து கொள்ளுமா றும், அதன் மூலம் அதிகமான வருமானம் ஈட்ட முடியும் எனவும் போலியான, கவர்ச்சியான ஏமாற்றும் நோக்கத்துடன் விளம்பரம் வெளியிட்டுள்ளனர்.  இதனை நம்பிய பட்டு க்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்று, அங்கு இருந்த தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிர சன்ன வெங்கடேசன் என்பவ ரிடம் இதுகுறித்து கேட்ட போது ரூ.12,000 செலுத்த வேண்டும் என்றும், மேலும்  இரண்டு நபர்களை சேர்த்து  விட வேண்டும் என்றும்,  அதற்கு ஈடாக கவர்ச்சிகர மான வீட்டு உபயோகப் பொ ருட்கள், மளிகை பொரு ட்கள், துணிமணிகள், சுற்றுலா ஏற்பாடு, வீட்டு மனை இவற்றில் ஏதேனும் ஒன்று வழங்கப்படும் என்று கூறி ரூ.12 ஆயிரத்தை பெற்றுக் கொண்டுள்ளார். ஆனால் அதற்கான ரசீது தர வில்லை. இதனால் பணத்தை  திருப்பிக் கேட்டதற்கு அந்த  நபரை தகாத வார்த்தைக ளால் திட்டி, பிரசன்ன வெங்க டேசன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.  இதுதொடர்பாக பெற ப்பட்ட புகாரின் அடிப்படை யில், தஞ்சை மாவட்ட குற்றப் பிரிவில் வழக்கு பதிந்து அந்நி றுவனத்தின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிர சன்ன வெங்கடேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  குற்றப்புலனாய்வு துறை நடத்திய விசாரணையில், திருச்சி மன்னார்புரத்தில் இயங்கிவரும் எல்ஃபின் இ- காம் பிரைவேட் லிமிடெட்  நிறுவனமானது, மத்திய  அரசு சட்டம், தமிழ்நாடு  அரசின் சட்டம் ஆகிய வற்றிற்கு விரோதமாக இயங்கி வருவது தெரிய வருகிறது.  இவ்வாறு மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம்  பொதுமக்களுக்கு நேரடி யாக ரசீது இல்லாமல் பொரு ட்களை விற்பனை செய்தல்,  சேவைகளை வழங்குதல் பொதுமக்களை கவர்ச்சி கரமான, போலியான வாக்கு றுதிகள் மூலம் உறுப்பின ராகவோ, சந்தாதாரராகவோ திட்டத்தில் சேர்ப்பதன் மூலம் ஒரு சிலருக்கு மட்டு மே பணப்பலன்கள் கிடை க்கும் வகையில், பண சுழற்சி முறையில் ஈடுபடுத்துதல் சட்டப்படி குற்றமாகும்.  எனவே பொதுமக்கள் யாரும் மேற்படி திட்டத்தில் சேர வேண்டாம் எனவும், இதுபோன்ற மோசடி வேலை களில் ஈடுபடுவோர் பற்றி  தகவல் தெரிந்தால் உடனடி யாக காவல்துறைக்கு தெரி விக்கவும். இவ்வாறு தஞ்சை மாவ ட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.